வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 74
“தாத்தா! இன்னும் ஒரு பாபத்தையும் அவர்கள் செய்கிறார்கள்; எங்கேயோ இருந்து சில மனிதர்களைப் பிடித்து வந்திருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு, தாமிரத்தில் வாள், கோடரி முதலிய ஆயுதங்களையும் பாத்திரங்களையும் செய்விக்கிறார்கள். அது மட்டுமல்ல; விவசாய வேலை, கம்பளம் நெய்வது, இன்னும் எத்தனையோ வேலைகளை இந்தப் பிடிபட்ட மனிதர்களைக் கொண்டே செய்விக்கிறார்கள், தாத்தா! அவர்கள் திறமையான தொழிலாளர்களாயிருக்கிறார்கள். அவர்களை இந்த மத்ரர்களும் பர்ஷுக்களும் மிருகங்களைப் போலவே வேண்டும்போது வைத்துக் கொள்ளவும் தேவையில்லாதபோது விற்றுவிடவும் செய்கிறார்கள். அவர்களை அடிமை என்று அழைக்கிறார்கள்.
“மனிதர்களை வாங்குவதும் விற்பதுமா? நாம் நம்முடைய ஆகாரப் பொருளை விற்பதுகூடப் பாபம் என்று நினைக்கிறோம். மத்ரர்களும் பர்ஷு க்களும் இப்படிப் பட்ட இழிவான நிலைமைக்குப் போய்விடுவார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஒரு விரல் அழுகிப் போனால் அதற்கு மருந்து என்ன தெரியுமா? அந்த விரலை வெட்டிவிட வேண்டியதுதான். இல்லையானால் சரீரம் பூராவும் அழுகிப் போகும். கீழ் மத்ரர்களையும் பர்ஷுக்களையும் வட்சு நதிக்கரையில் வசிக்க அனுமதிப்பதே பாபம். இந்தப் பாப காரியங்களைப் பார்த்துக்கொண்டு நான் இனி வெகு நாட்களுக்கு இருக்கக் கூடாது.”
தாத்தா இதுவரை கூறிவந்த கதைகள் மனத்துக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியனவாகவே இருந்தன. ஆனால் இந்தப் புது ஆயுதங்கள் இல்லாமல் மனிதர்கள், விலங்கினங்கள் முதலிய எதிரிகளுக்கிடையே ஜீவிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்வதற்குப் போதிய அறிவு அவனுக்கு இருந்தது.
மூன்றாவது நாள் பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு புருகூதன் பயணமானான். தாத்தா அவனுடைய உச்சியிலும் நெற்றியிலும் முத்தமிட்டு ஆசீர்வதித்தார். ரோசனா அவனை வழியனுப்ப வெகுதூரம் கூடவே சென்றாள். புருகூதனும் ரோசனாவும் பிரியும்பொழுது ஒருவர் மற்றொருவருடைய கன்னங்களைக் கண்ணீரால் நனைத்துக் கொண்டனர்.
3
தாத்தா வாக்கு சரியாகப் பலித்தது. இருபத்தைந்து வருஷங்கள் கழிந்த தென்றால்தான் என்ன? கீழ்மத்ரர்களும் பர்ஷுக்களும் மேல்மத்ரர்களையும் புருக்களையும் நசுக்கிக் கொண்டே வந்தனர். மேல் மத்ர-புரு குலத்தவர்கள் சுதந்திர ஸ்திரி புருஷர்கள். அவர்களுடைய உணவு, உடைச் செலவுகள் அதிக
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 74, புத்தகங்கள், தாத்தா, இந்தப், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, நம்முடைய, அவர்களை, கொண்டே, பாபம், என்ன, அழுகிப், பர்ஷுக்களும், மத்ரர்களும், கொண்டு, மாட்டார்கள், வைக்க, சிறந்த, முன்னோர்கள், இன்னும், முதலிய, செய்கிறார்கள், செய்விக்கிறார்கள்