வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 73
தானியத்தை உற்பத்தி செய்யவில்லை; மிருகங்களுக்காக உற்பத்தி செய்கிறாள். நாம் சாப்பிடுவதற்கு இந்த ஆடுகளும், மாடுகளும், குதிரைகளும் இருக்கின்றன. இவைகளையல்லாமல், காடுகளிலே மான், பன்றி, கரடி இன்னும் எத்தனையோ மிருகங்கள் இருக்கின்றன. திராட்சை, கொய்யா முதலிய பழங்கள் இருக்கின்றன. பூமாதேவி இந்த ஆகாரங்களை நமக்கு வெகு சந்தோஷத்தோடு கொடுத்திருக்கிறாள். ஆனால், இந்தப் பாபி, கீழ்மத்ரர்களும் பர்ஷுக்களும் நம்முடைய புராதன முறையை உடைத்துப் புதுவழி காட்டி விட்டார்கள். இதனாலேதான் மனிதர்களின் மீது தேவதைகளுக்குக் கோபம் உண்டாயிருக்கிறது. இந்த வட்சு நதி வாசிகளுடைய தலையில் இன்னும் என்னென்ன எழுதியிருக்கிறதோ யாருக்குத் தெரியும்! இருபத்தைந்து வருஷங்களாக நான் கிராமத்துக்குப் போகவில்லை. இந்தக் காட்டிலே இப்படிக் குடிசையிலேதான் இருக்கிறேன். பனிக் காலத்தில் கீழே ஒரு குடிசைக்குப் போய்விடுகிறேன். நம்முடைய முன்னோர்களின் ஆணை - கட்டுப்பாடுகளை இவர்கள் உடைக்க விரும்புகிறார்கள். அவர்கள் வசிக்கும் கிராமத்திற்குப் போக எனக்கு மனம் வரவில்லை. நம்முடைய முன்னோர்கள் சொல்லிப் போன நீதிகளை, இதுவரை நான் பின்பற்றி வந்திருக்கின்றேன். என்னிடம் தெரிந்து கொள்ள விரும்பி வருபவர்களுக்கும் அவற்றைப் போதிக்கிறேன். ஆனால் முன்னோர்களின் வாக்கியங்களை அலட்சியம் செய்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. இப்பொழுது கீழ்மத்ரர்களும், பர்ஷுக்களும் இந்த விவசாயத்தோடு கூடத் திருப்தி அடையவில்லை. வட்சு நதிக்கரையின் செல்வத்தைச் சுமந்து சுமந்து
சென்று எங்கோ கொடுத்து விட்டு, என்னென்னத்தையோ அள்ளிக் கொண்டு வருகிறார்கள். ஒரு குதிரையைக் கொடுத்து விட்டு, தாமிரப் பாத்திரத்தை வாங்கினால் உணவுக்குக் கஷ்டம் ஏற்படாமல் என்ன செய்யும்? இன்னும் கொஞ்ச காலத்தில் புருகுலத்தோருக்கு ஆகாரமும் உடையும் இராது. உணவும் உடையும் மலிந்து கிடந்த அவர்களுடைய வீடுகளில், அப்பொழுது இந்தத் தாமிரப் பாத்திரங்கள்தான் நிறைந்திருக்கும்,”
“இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன் தாத்தா! இப்பொழுது கீழ்மத்ரர்கள், பர்ஷுக்கள் வீட்டுப் பெண்கள் காதுகளிலும், கழுத்திலும், ஏதோ மஞ்சள் நிறமாயும், வெள்ளை நிறமாயும் ஆபரணங்கள் போட்டுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்களாம். ஒரு காது ஆபரணத்திற்கு ஒரு குதிரை விலை ஆகிறதாம். அது தாமிரமில்லை; மஞ்சள் நிறமாய் இருப்பதைத் தங்கமென்றும் வெண்மையாய் இருப்பதை வெள்ளியென்றும் சொல்லுகிறார்கள்.
“இந்த அதர்மிகளை யாரும் கொலை செய்யவில்லையா? வட்சு நதிவாசிகள் எல்லோரையும் ஒழித்தே விடுவார்கள் இந்தப் பாவிகள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 73, புத்தகங்கள், நம்முடைய, கங்கை, தானே, வட்சு, இன்னும், நான், பக்கம், வால்காவிலிருந்து, இருக்கின்றன, சுமந்து, இப்பொழுது, விட்டு, கொடுத்து, உடையும், நிறமாயும், மஞ்சள், கொள்ள, தாமிரப், இந்தப், பூமாதேவி, முன்னோர்கள், சிறந்த, உற்பத்தி, கீழ்மத்ரர்களும், காலத்தில், பர்ஷுக்களும், முன்னோர்களின்