வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 64
“ரோசனா! நாளைப் பிற்பகலுக்குள் நாம் மலை உச்சியை அடைந்து விடுவோம். அதிலிருந்து உங்களுடைய பசுத் தொழுவம் ரொம்ப தூரம் இராதே?”
“அந்த இடத்திலிருந்து கிழக்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது.”
“என்னுடையது அதே திசையில் எட்டு மைல் தூரத்திலிருக்கிறது, ரோசனா. உங்களுடைய பசுக் கொட்டிலின் வழியாகத்தான் நான் போக வேண்டியிருக்கிறது.”
“அப்படியானால் என்னுடைய முப்பாட்டனாரை நீ பார்க்க முடியும். உனக்கும் அவருக்கும் சந்திப்பு ஏற்பட வேண்டுமே என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.”
“ரோசனா! இன்னும் வழியிலே நாம் தாமதிக்க வேண்டியது ஒரே ஒருநாள் தான். இப்பொழுது இந்த மாமிசம் நமக்குப் போதுமல்லவா?”
“போதும்; ஏராளம். என்னிடத்திலும், கன்றினுடைய தொடை மாமிசம்
இருக்கிறது. அதிக நேரம் வைத்திருந்தாலும் மாமிசம் கெட்டுப் போகும்.”
“பரவாயில்லை. இதில் உப்புப் போட்டுச் சமைத்தால் ருசியாயிருக்குமா?”
“மிக மிக நன்றாக இருக்கும் புருகூத! நான் கன்றின் கால்களும் வைத்திருக்கிறேன். மாமிசம், கால் இவற்றோடு கொஞ்சம் மாவையும் சேர்த்து அருமையான சூப் செய்யலாம். இப்போது ஆரம்பித்தால் நாம் நித்திரைக்குப் போவதற்குள் சூப்புத் தயாராகி விடும்.”
“நான் தனிமையாய் இருந்தால் சூப்புப் போடுவது கிடையாது. அதற்கு ரொம்ப நேரம் ஆகிறது. ஆனால் இன்று நாம் இந்த ஆடுகளையும், கழுதைகளையும் பிடித்துக் கட்டிவிட்டுக் கொஞ்சம் பேசிக்கொண்டிருப்போம். அதற்குள் சூப்பும் தயாராகி விடும்.”
“என்னுடைய முப்பாட்டனாருக்கு நான் வைக்கும் சூப்பு ரொம்பப்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 64, புத்தகங்கள், நாம், மாமிசம், நான், புருகூதன், கொஞ்சம், கொண்டு, கங்கை, பக்கம், வால்காவிலிருந்து, மைல், ரொம்ப, திசையில், நேரம், விடும், தயாராகி, உங்களுடைய, இருக்கிறது, ரோசனா, உடனே, சுமையை, சிறந்த, அந்த, காய்ந்த, சிறிய, பாத்திரத்தை, பார்த்த, “ரோசனா