வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 55
“புரு குலத்தோர் நம்முடைய மாடுகளையும், குதிரைகளையும் ஓட்டிக்கொண்டு செல்கின்றனர்” என்றாள்.
“ஓட்டிக்கொண்டு செல்கிறார்களா? நம்முடைய வாலிபர்களெல்லோரும் மதுவெறியில் மூழ்கிக் கிடக்கிறார்கள். மதுரா! நீ எதுவரை சென்றாய்?”
“அவர்கள் யார் என்று நான் தெரிந்துகொள்ளக் கூடிய அளவு சென்றேன்.”
“எல்லா மிருகங்களையுமா ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள்?”
“ஆங்காங்கு மேய்ந்த மிருகங்களை ஒன்றுசேர்ப்பதில் அவர்கள் நீண்ட நேரத்தைச் செலவு செய்திருப்பதாய்த் தெரிகிறது.”
“மதுரா! உன்னுடைய அபிப்பிராயம் என்ன?”
“தாமதம் செய்வது கூடாது”.
“நம்முடைய வாலிபர்கள் எல்லாம் குடி மயக்கத்தில் கிடக்கிறார்களே?”
“யாரால் நடக்கமுடியுமோ அவர்களைக் கொண்டாவது நாம் எதிர்க்க வேண்டும்.”
“அவசியம் நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் மதுரா, உன்னிடம் நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன். நீ இப்பொழுது என்னோடு வர வேண்டாம். இந்த விஷயம் தெரிந்தவுடனேயே வாலிபர்களுடைய குடி மயக்கம் பாதி தெளிந்துவிடும். மற்றப் பாதி மயக்கம் தெளிவதற்குத் தயிரைக் கொடுக்க வேண்டும். உணர்ச்சி வரவர அவர்களை நீ அனுப்பிக் கொண்டே இரு.”
“பெண்கள்?”
“நம்முடைய குரு-குலப் பெண்களும் யுத்தத்தில் இறங்க வேண்டுமென, நான் தலைவன் என்ற முறையில் உத்தரவு போடுகிறேன். கைவிடப்பட்ட அவர்களுடைய புராதனப் பழக்கத்தை நாம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 55, புத்தகங்கள், வேண்டும், நான், நாம், பக்கம், மதுரா, கங்கை, வால்காவிலிருந்து, எதிர்க்க, குடி, விஷயம், பாதி, மயக்கம், “நம்முடைய, சிறந்த, அமிர்தாஸ்வன், நோக்கி, குரலில், வந்த, மூழ்கிக், ஓட்டிக்கொண்டு, நம்முடைய, நாய்கள்