வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 56
உடனே வாத்தியங்கள் நிறுத்தப்பட்டன; ஆண்களும் பெண்களுமாக யாவரும் தலைவனின் முற்றத்தில் கூடிவிட்டனர். அவர்களுடைய மாடுகளையும் குதிரைகளையும் அபகரித்துச் செல்லும் தகவலைக் கேட்ட உடனேயே அநேகருக்குக் குடிமயக்கம் ஓடிவிட்டது. காம வேட்கை குடிகொண்டிருந்த அவர்களது முகங்கள் கோபத்தால் சிவந்தன. தலைவன் அமிர்தாஸ்வன் கோடை காலத்து மேகம் குமுறுவது போல், அவர்களைப் பார்த்துக் கர்ஜிக்கத் துவங்கினான்:
“குரு குல வாலிபர்களே! யுவதிகளே! நம்முடைய சத்துருக்கள் புருகுலத்தோர் நமது சொத்துக்களை அபகரித்துச் செல்கிறார்கள். அவைகளை
மீட்க வேண்டும். யுத்தம் நடக்கும். குடி மயக்கம் தெளிந்திருப்பவர்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு என் பின்னால் வாருங்கள்; இன்னும் மயக்கம் தெளியாதிருப்பவர்கள் மதுராவிடம் தயிர் வாங்கி அருந்துங்கள். உணர்வு வந்தவுடன் ஓடோடியும் வாருங்கள். குரு-குலப் பெண்களே! புராதன காலத்து நம்முடைய குல மங்கையர், யுத்த களத்திலே, ஆயுதம் ஏந்தி ஆண்களுக்குச் சமமாகப் போர் புரிந்திருக்கிறார்கள். இதை நம் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். உங்கள் தலைவன் அமிர்தாஸ்வன் இன்று உங்களை யுத்தகளத்திற்கு அழைக்கிறான்.”
நொடிப்பொழுதுக்குள் நாற்பது குதிரைகள் தயாராகி விட்டன. புரு- குலத்தோர் தாங்கள் திரட்டிய மந்தைகளை சமவெளி கடந்து மலைகளின் மீது ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மணி நேர ஓட்டத்திற்குப் பின்னே குரு ஜனங்கள் அவர்களை மடக்கி விட்டார்கள். குதிரைகளையும் பசுக்களையும் ஒருமுகப்படுத்தி மலைமீது ஏற்றுவது என்பது சுலபமான காரியம் அல்ல. குதிரை மீது ஏறியிருக்கும் எதிரிகள், சவுக்காலும், கற்களாலும் அதட்டி, அந்த மந்தைகளை மலை மீது ஏற்றுகின்றனர். அமிர்தாஸ்வன் நெருங்கிப் பார்க்க எதிரிகள் கிட்டத்தட்ட நூறுபேர் வரை இருக்குமெனத் தெரிந்தது. தன்னுடைய நாற்பது பேரைக் கொண்டு இவர்களுடன் பொருதுவதா, வேண்டாமா என்ற யோசனையில் நேரத்தைக் கடத்த விரும்பவில்லை. கொம்பினால் தயாரித்த நீண்ட ஈட்டியைக் கையிலேந்திய அமிர்தாஸ்வன் எதிரிகளின் மீது போர் தொடுப்பதற்குக் கட்டளையிட்டான்.
அமிர்தாஸ்வனின் ஆணை கேட்ட குருகுல ஆடவரும் மகளிரும் - ஆம், மங்கையர் பாதிப் பேர் வரை இருந்தனர். பயமற்ற நெஞ்சினராய்த் தங்கள் தங்கள் குதிரைகளை மேலும் தூண்டினர். இவர்களைப் பார்த்த புருகுல எதிரிகள் தங்களில் சிலரைப் பசுக்களையும், குதிரைகளையும் காக்க நிறுத்திவிட்டு ஏனையோர் எதிர்த்துத் தாக்குவதற்கு வசதியான சமீபத்திலுள்ள சமவெளியை அடைந்தனர்.
அங்கே கோரயுத்தம் மூண்டது. அமிர்தாஸ்வனுடைய வீரத் தோற்றமும், யுத்தத் திறமையும் பார்க்கத் தக்கதாயிருந்தது! அவனுடைய குதிரை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 56, புத்தகங்கள், அமிர்தாஸ்வன், மீது, பக்கம், எதிரிகள், குதிரைகளையும், வால்காவிலிருந்து, கங்கை, போர், நாற்பது, மந்தைகளை, குதிரை, தங்கள், மங்கையர், பசுக்களையும், மயக்கம், கேட்ட, அபகரித்துச், சிறந்த, தலைவன், காலத்து, வாருங்கள், கொண்டு, நம்முடைய, குரு