வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 53
இந்த வரலாற்றைக் கேட்ட தந்தை வியப்படைந்தவனாய் “இந்த வாலிபன் உன்னைத் தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லையா.?”
“பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லை.”
“அப்படியானால் நம்முடைய குல ஆசாரப்படி, நீ இந்த வாலிபனுக்கு
உரியவளாகி விட்டாயல்லவா?”
“ஆம். நான் இந்த யுவனைக் காதலிக்கவும் செய்கிறேன்.”
மதுராவினுடைய தந்தை உடனே வெளியே வந்து அமிர்தாஸ்வனை வரவேற்று உபசரித்து, வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். கிராமம் பூராவும் இந்த விஷயம் உடனே பரவி விட்டது. ஒவ்வொருவருக்கும் இந்தக் காரியம் பெரிய அதிசயமாகத் தோன்றியது. கிராம மக்கள் எல்லோருடைய அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமாகிய அமிர்தாஸ்வன், அவர்களுடைய ஆதரவோடு மதுராவை அழைத்துக் கொண்டு, மாமியார் வீட்டை விட்டுக் கிளம்பினான்.
3
இப்பொழுது அமிர்தாஸ்வன் தன்னுடைய கிராமத்துக்கு-குருகுலம் பூராவுக்கும் தலைவனாகி விட்டான். அவனிடம் ஐம்பதுக்கதிகமான குதிரைகளும், மாடுகளும் ஏராளமான ஆடுகளும் இருந்தன. அவனுடைய புத்திரர்கள் நால்வரும், மதுராவும் வீட்டுக் காரியங்களைக் கவனித்துக் கொள்கின்றனர். மற்றும் கிராமத்தின் எளிய வீட்டில் பிறந்த ஒரு சிலரும் அவனுடைய வீட்டில் வேலை செய்கிறார்கள். இந்த ஏழைகள் கூலியாட்கள் என்ற தோரணையில் அல்ல, அவனுடைய வீட்டின் அங்கத்தினர்கள் என்ற தோரணையிலேயே வேலை செய்தனர். குருகுலத்தவர், ஒருவரையொருவர் அடிமை கொள்ள முடியாது; சமமான அந்தஸ்திலேயே நடத்த வேண்டும். அமிர்தாஸ்வனுடைய இந்தக் கிராமத்தில் உத்தேசம் ஐம்பதுக்கு மேற்பட்ட குடும்பங்களிருந்தன. இவர்களுக்கிடையில் ஏற்படும் மனஸ்தாபங்கள், சண்டை சச்சரவுகள் இவைகளை இந்தக் கிராமத் தலைவனே விசாரித்துத் தீர்த்து வைக்க வேண்டும். இன்னும் தண்ணீர், ரோடுகள் இவை போன்ற கிராமப் பொதுவுக்குத் தேவையான காரியங்களையும் இந்தத் தலைவனே கவனிக்க வேண்டும். இவை தவிர இன்ன நேரமென்றில்லாமல் எந்த நேரமும் சம்பவிக்கக்கூடிய யுத்தத்தில் சேனைக்குத் தலைமை வகித்து நடத்த வேண்டிய பெரிய பொறுப்பும் அவனையே சேர்ந்தது; உண்மையில் யுத்தத்தில் காட்டும் திறமையைப் பொறுத்தே இந்தத் தலைமைப் பதவி கிடைக்கிறது.
அமிர்தாஸ்வன் ஒரு பெரிய வீரன்; பராக்கிரமசாலி. பக்தர்கள், வால்ஹீகர்கள், இன்னும் எத்தனையோ குலத்தோருடன் ஏற்பட்ட யுத்தத்தில் அமிர்தாஸ்வன் தன்னுடைய பராக்கிரமத்தைப் பலமுறை காண்பித்து வெற்றி கண்டிருக்கிறான். தான் மதுராவுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளையும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 53, புத்தகங்கள், அமிர்தாஸ்வன், கொண்டு, பெரிய, அவனுடைய, யுத்தத்தில், வேண்டும், பக்கம், இந்தக், கங்கை, வால்காவிலிருந்து, நடத்த, வேலை, இன்னும், இந்தத், வீட்டில், தலைவனே, சிறந்த, உடனே, தூக்கிக், வந்து, வீரன், தன்னுடைய, நான், தந்தை