வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 37
நடனத்துக்கு உபயோகமாகும் வாத்தியங்கள் யுத்த வாத்தியங்களாயின. குழந்தைகளையும் விருத்தர்களையும் பாதுகாப்பதற்காகச் சில நபர்களை மட்டும் வைத்துவிட்டு, மற்ற யாவரும் யுத்த களத்திற்குக் கிளம்பி விட்டனர். அவர்களுடைய மார்புகளிலே கனத்தத் தோலால் செய்யப்பட்ட கவசங்கள், கைகளில் கல், மரம், தோல் இவைகளால் செய்யப்பட்ட வில், அம்பு, ஈட்டி முதலிய ஆயுதங்கள். முன்னே வாத்தியம் முழங்க பின்னே இந்தப் படை செல்கிறது. சமூகத்தாய் திவா தலைமை தாங்கி முன்னே நடக்கிறாள். இவர்களுடைய வாத்தியங்களின் ஓசையும், இவர்கள் போடும் கோலாகல இரைச்சலும், அந்த வனத்தையே அதிரும் படி செய்கின்றன. அவ்வனத்தில் வாழும் பட்சிகளும் மிருகங்களும் பயத்தால் இங்குமங்கும் ஓட்டமெடுத்தன!
இப்போது இவர்கள் தங்கள் வனத்தைக் கடந்து பொது இடத்திற்குப் போய்விட்டார்கள்; இவர்களுடைய வனம், அவர்களுடைய வனம், பொது இடம் இவைகளின் எல்லையை வரையறுக்கும் எந்த அடையாளமும் இல்லையானாலும்கூட வேட்டையாடித் திரியும் அந்த இரு சமூகத்தையுஞ் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்களின் எல்லை நன்றாகத் தெரியும்.
பொய் சொல்லவும் மாட்டார்கள். ஏனெனில், அந்தக் கால மனித சமுதாயத்திற்குப் பொய்யென்பது தெரியாத பொருள். அதைக் கற்றுக்கொள்ளும் திறமையையும் அந்தச் சமுதாயம் பெற்றிருக்கவில்லை. வேட்டையாடிக் கொண்டிருந்த உஷா சமூக ஆட்கள் தகவலைச் சமூகத்திற்குத் தெரிவித்தனர். உடனே எல்லோரும் ஆயுதமேந்தி யுத்த களத்திற்கு வந்துவிட்டனர். உண்மையில் உஷா சமூகத்தினர் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றுதான் விரும்பினர். ஆனால் அவர்களின் எதிரிகள் இந்நியாயத்திற்குத் தயாராயில்லை. உஷா-சமூகத் தாருடைய வனத்தில் இரு சமூகத்தாருக்கும் யுத்தம் மூண்டது. கல்லால் செய்யப்பட்ட கூர்மையான அம்புகளை மழை போன்று வருஷிக்கிறார்கள். கல்லாலும், மரத்தாலும், எலும்பாலும், கொம்புகளாலும் செய்யப்பட்ட விதவிதமான ஆயுதங்களை உபயோகித்துப் பயங்கரமாகச் சண்டை போடுகிறார்கள். ஆயுதங்களை இழந்து விட்டவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் பற்களையும் உபயோகித்துச் சண்டை செய்கிறார்கள்.
நிஷா-சமூகத்தாரின் எண்ணிக்கை உஷா-சமூகத்தாரின் எண்ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு இருந்தது. ஆகையால் அவர்களை உஷா-சமூகத்தார் வெற்றி காண்பதென்பது முடியாத காரியம். ஆயினும் யுத்தம் செய்து தானேயாக வேண்டும்? ஒரு சிறு குழந்தையாவது உயிரோடிருக்கும் வரை யுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. உஷா -சமூகத்தினர் மூன்றில் இரண்டு பகுதியினர் யுத்த களத்திலேயே மடிந்து விட்டனர். பாக்கி ஒரு பகுதியினரும்
வால்கா நதிக் கரையில் சண்டை செய்து கொண்டே உயிர் விட்டனர். குடிசையில் கிழவர்களையும் குழந்தைகளையும் காத்து நின்றவர்கள், அவர்களையும் கூட்டிக்கொண்டு குடிசையை விட்டு ஓட நினைத்தனர். ஆனால், காலம் கடந்துவிட்டது. யுத்தவெறி பிடித்த நிஷா சமூகத்தினர் அவர்களை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 37, புத்தகங்கள், யுத்த, செய்யப்பட்ட, பக்கம், யுத்தம், விட்டனர், தங்கள், வால்காவிலிருந்து, கங்கை, சமூகத்தினர், சண்டை, ஆயுதங்களை, சமூகத்தாரின், செய்து, அவர்களை, இரண்டு, வனம், நிஷா, இவர்களுடைய, பழிக்குப், கொலை, சிறந்த, குழந்தைகளையும், அவர்களுடைய, அந்த, இவர்கள், முன்னே, பொது