வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 38
புத்திரனோடு நடனம் ஆடுகிறாள். நிர்வாணமாய் ஆடும் அந்த இரண்டு உருவங்களும் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்கின்றனர்; ஆலிங்கனம் செய்கின்றனர். இன்று திவாவின் காதலுக்கு அவள் மகன் வசு இலக்காயிருக்கிறான் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர். வெற்றி வெறியில் திளைத்திருக்கும் தாயின் காதலை, மகனும் அலட்சியம் செய்ய விரும்பவில்லை.
நிஷா-சமூகத்திற்கு, இப்போது வேட்டையாடுவதற்குக் காடு நான்கு மடங்காகி விட்டது. மழைக்காலத்தைப் பற்றி இனி அவர்களுக்குக் கவலை கிடையாது. ஆனால் ஒரு கவலை மாத்திரம் அவர்களை இப்போது தொத்திக்கொண்டது. இறந்து போன உஷா ஜனங்களின் ஆவிகள் உயிரோடிருக்கும் போது செய்யமுடியாத காரியங்களையெல்லாம் இப்போது செய்ய முயலுகின்றன. எரிந்து போன அவர்களது குடிசைகள் இப்போது பேய் வாழும் இடமாக மாறிவிட்டன. அந்த வழியாகத் தனிமையில் நடப்பது நிஷா- சமூகத்தாருக்கு முடியாத காரியம். வேட்டையாடும் போது எத்தனையோ முறை ஜோதி மயமாக எரியும் நெருப்பையும், அதன் முன்னே நிர்வாணமாக அநேகர் நடனமாடுவதையும் பார்த்ததாகப் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த வனத்தை விட்டு அடுத்த பிரதேசத்திற்குப் போகும் போது அந்த மயான பூமி வழியாகவே தான் செல்ல வேண்டும். அப்போது கூட்டமாகவும், பகலிலும் நடந்து கடக்கின்றனர். திவாவும் கூட பலமுறை, அநேக இரவுகளில், பால் மணம் மாறாத குழந்தைகள் பூமியிலிருந்து எழும்பித் தன் கைகளைப் பின்னுவதாகக் கனவு கண்டு அலறி விழித்திருக்கிறாள்.
4
திவா இப்பொழுது பெரிய கிழவியாகி விட்டாள். வயதும் எழுபதுக்கு மேல் ஆகிவிட்டது. நிஷா-சமூகத்துக்கு இப்போது அவள் தலைவி இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 38, இப்போது, புத்தகங்கள், அந்த, அவள், பக்கம், திவா, நிஷா, வால்காவிலிருந்து, கங்கை, போது, கல்லிலே, செய்ய, இன்று, விட்டது, கவலை, நடனம், கொண்டனர், அவர்களின், கொன்றார்கள், மோதிக், சிறந்த, குழந்தைகள், எரியும், அக்னி, கேட்டு, நெருப்பின், தலைவி