வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 36
ஜன வளர்ச்சிக்குத் தக்கபடி விசாலமான காடுகளும் வேண்டுமல்லவா? இப்பொழுது அவர்கள் புதிதாகக் குடிசை போட்டுள்ள காட்டிற்கு வடக்குப் பக்கத்தில் உஷா ஜனங்களின் காடு இருக்கிறது. இந்த இரண்டு வனங்களுக்குமிடையில் யாருக்கும் சொந்தமில்லாத பொது இடமிருக்கிறது. நிஷா சமூகத்தார் இந்தப் பொதுக் காட்டையும் கடந்து உஷா சமூகத் தாருடைய வனத்திலும் வேட்டையாடுவதற்குப் பலமுறை சென்றிருக்கிறார்கள். இவ்விதம் அத்துமீறிப்போவது நல்லதன்று, சண்டைக்கு அடிகோலுவதாகும் என்பதும் நிஷா சமூகத்தாருக்குத் தெரியாமலில்லை. ஆயினும், இவர்களுக்கு வேறு வழியில்லை. ஒருநாள் திவா, சமூகக்குழுவில் “பகவானுடைய கிருபையால் நம்முடைய சமூகம் ஜன எண்ணிக்கையில் பெருகி விட்டது. இவர்களுடைய போஷிப்பிற்கு இந்த வனாந்தரங்களைத் தவிர்த்து வேறு மார்க்கமில்லை. நிஷா சமூகத்தாராகிய நமக்கு வால்கா நதியிலுள்ள மீன்கள் எப்படியோ அப்படியேதான், அந்த வனங்களிலுள்ள விலங்குகளும். ஆகையால், நாம் இந்த வனங்களிலுள்ள கரடிகள், மான்கள், பசுக்கள், குதிரைகள் முதலிய விலங்குகளை வேட்டையாடாமல் முடியாது” என்று எடுத்துச் சொன்னாள்.
நிஷா-சமூகத்தார் செய்யும் இந்தக் காரியம் அநியாயம் என்று உஷா- சமூகத்தாருக்குப் பட்டது. இவர்கள் குழு நிஷா சமூகக் குழுவிடம் பலமுறை இது விஷயமாகப் பேசியது: “நாம் எத்தனையோ மழைக் காலத்தை இந்தக்
காடுகளில் கழித்திருக்கிறோம். எந்தக் காலத்திலும் நம் இரு சமூகங்களுக்கிடையில் யுத்தம் நடந்ததே கிடையாது” என்று விபரமாக உஷா- சமூகக்குழு, நிஷா-சமூகக் குழுவிடம் எடுத்துச் சொல்லியது. இது நியாயமான விஷயம்தான். ஆனால் பட்டினியால் சாகும் போது, நிஷா-சமூகக் குழு நியாயத்தைக் கடைப்பிடிக்க முடியுமா? நியாயமும் சட்டமும் பலனற்றுப் போகும்போது, காட்டுமிராண்டிச் சட்டத்தைக் (மிருகத்தனத்தை) கடைப் பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இரு சமூகமும் உள்ளுக்குள் இதற்குத் தயார் செய்ய ஆரம்பித்தன; இந்தச் சமூகத்தின் ரகசியம் அந்தச் சமூகத்திற்கோ, அந்தச் சமூகத்தின் ரகசியம் இந்தச் சமூகத்திற்கோ தெரிய வசதியில்லை, ஏனெனில் கொள்ளல்-கொடுத்தல், சாவு, வாழ்வு யாவும் ஒரு பரிவாரத்திற்கு வெளியே நடப்பதில்லை.
ஒரு நாள் நிஷா-சமூகத்தின் ஆட்கள் சிலர், உஷா-சமூகத்தின் வனத்திற்கு வேட்டையாடச் சென்றனர். மறைந்திருந்த உஷா-சமூகத்தார் உடனே தாக்க ஆரம்பித்தார்கள்; இவர்களும் எதிர்த்தனர். ஆயினும் எண்ணிக்கையில் இவர்கள் குறைவு, எதிர்பார்க்கவும் இல்லை. ஆகையால் நிஷா-சமூக ஆட்கள் இறந்தவர்களை அங்கேயே போட்டு விட்டு, காயம் பட்டவர்களை மாத்திரம் தூக்கிக்கொண்டு ஓட்டமெடுத்தனர். இது நிஷா- சமூகத்தின் தலைவிக்கு எட்டியது, குழு கூடியது. சர்ச்சை நடந்தது. அப்பால் சமூகம் பூராவும் ஆண் பெண் அடங்கலும் சேர்ந்த சபை கூடியது. அதற்குமுன் எல்லா விஷயங்களும் தெரிவிக்கப்பட்டன. இறந்தவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன.
காயம்பட்டவர்களைத் தூக்கிக்கொண்டு வந்து காண்பித்தார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 36, நிஷா, புத்தகங்கள், சமூகத்தின், இவர்கள், சமூகக், வேறு, பக்கம், குழு, சமூகத்தார், எண்ணிக்கையில், வால்காவிலிருந்து, கங்கை, குழுவிடம், ரகசியம், இந்தச், கூடியது, ஆட்கள், சமூகத்திற்கோ, தூக்கிக்கொண்டு, அந்தச், சமூகம், பலமுறை, வேட்டையாடுவதற்குப், சிறந்த, ஆயினும், வழியில்லை, எடுத்துச், ஆகையால், வனங்களிலுள்ள, இந்தக்