வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 35
திவாவைப் பார்த்தீர்களா? அவளுடைய கரங்கள் இன்று துருவனுடைய தோள்களைப் பின்னிக் கிடக்கின்றன. சூரன் மற்றொரு யுவதியின் அருகே அமர்ந்திருக்கிறான்.
போஜனம், குடி, பாட்டு, நடனம், ஒரே களியாட்டம். இது முடிந்ததும் அந்த விசாலமான பாகத்தில் காதலர்கள் நித்திரை செய்வர். அதிகாலையில் எழுந்துவிடுவர். வேலையில் ஆண், பெண் என்ற வித்தியாசமே இல்லை. சிலர் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பார்கள். சிலர் வேட்டையாடச் செல்வார்கள். சிலர் காய்கனிகள் பறிப்பார்கள். இவர்களுடைய குழந்தைகள் தாய்மார்களின் மடியிலே சில, விருட்சங்களின் நிழலிலே சில, நதிக்கரையின் மணல் மேட்டிலே சில இவ்விதமாகக் குதித்து விளையாடி ஆனந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிஷாவினுடைய ஆட்சிக் காலத்தைப் பார்க்கிலும் இப்பொழுது இங்கே விருத்தர் முதல் யாவரும் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள். இந்தச் சமூகம் இதிலிருக்கும் ஒரு தாயினுடைய தலைமையின் கீழிருந்தாலும் அந்தத் தாயின் ராஜ்யம் இங்கில்லை. இங்கே பல தாய்மார்களின் குடும்பங்கள் சேர்ந்த ஒரு கூட்டுச் சமூகமிருக்கிறது. இங்கே ஒரு தாயின் சர்வாதிகாரமில்லை; ஒரு சபையின் ஆட்சியிருக்கிறது. ஆகவே எந்த நிஷாவுக்கும் தன் மகள் லேக்காவை வால்கா நதியில் மூழ்கடித்துக் கொல்லவேண்டிய அவசியம் இங்கில்லை.
3
இப்போது திவா, நான்கு புத்திரர்களுக்கும் ஐந்து புத்திரிகளுக்கும் தாயாகி விட்டாள். நாற்பத்தைந்து வயதுப் பிராயத்தில் அவள் நிஷா பரிவாரத்தின் தலைவியாக்கப்பட்டாள். கடந்த இருபத்தைந்து வருஷங்களில் நிஷா சமூகத்தின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகிவிட்டது. அதற்காக இவள் அடிக்கடி பகவானுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். சூரன் தன்னுடைய சந்தோஷத்தைத் தெரிவிப்பதற்கு அறிகுறியாய், இவளுடைய கன்னங்களில் முத்தமிடும்போது, இது அக்னி தேவனின் அன்பு; பகவானின் கருணை என்று இவள் கூறுவாள். அக்னி பகவானின் பக்தர்களுக்கு யாதொரு குறைவுமில்லை. அவர்கள் வாசஸ்தலத்தின் அருகே வால்கா நதி பெருக்கெடுத்தோடுவதைப் போல், தேனும் மதுவும் பெருக்கெடுத்தோடும். அவர்கள் வாழும் வனத்தே நானாவித மிருகங்கள் தானாகவே வந்து மேயும் என்பது இவர்களின் நம்பிக்கை.
நிஷா சமூகத்துக்கு இப்போது ரொம்பக் கஷ்டம். பருவ காலத்திற்குத் தக்கபடி இவர்கள் பிரதேசம் விட்டுப் பிரதேசம் செல்லும்போது அந்தக் காடுகள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 35, புத்தகங்கள், சிலர், இங்கே, கங்கை, நிஷா, வால்காவிலிருந்து, பக்கம், இப்போது, அக்னி, பிரதேசம், பகவானின், வால்கா, இவள், தாய்மார்களின், அந்த, சிறந்த, சூரன், அருகே, தாயின், இங்கில்லை