வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 359
“இது அவருடைய கொள்கையின் அடிப்படையையே தாக்குவதாகும்.”
“அவருடைய ஒவ்வொரு அசைவும், சுரண்டப்படு வர்களுக்கு இந்தியாவிலே மிக அதிகமாகச் சுரண்டப்படுகிற ஜாதியாராகிய எங்களுக்கு, ஆபத்தானதாகவே இருக்கிற தென்று நான் கருதுகிறேன். அறிவை அந்தகாரத்திலே மூழ்கடிக்கும் விடுதிகள்-சுரண்டுபவர்களை இறுதியாகக் காப்பாற்றும்
புரோகிதர்களின் கடைகளான இந்தக் கோயில்களை மூடிப் பூட்டி விடவேண்டியதிருக்க, காந்திஜி எங்களை இழுத்துப் பிடிப்பதற்காக அந்தக் கோவில்களைத் திறந்துவிடச் செய்கிறார். பழைய ஏடுகளையும், பணக்காரர்களின் தானத்திலே வளர்கின்ற கதைகளையும் நாம் எரித்துவிடச் சம்மதிக்காவிட்டாலும், பூட்டிப் போட்டாவது மூடிவிட வேண்டாமா? ஆனால் காந்திஜி அவைகளை விளம்பரப்படுத்தி, அவைகளுக்குப் புது உருவம் கொடுக்க முயலுகிறார். வருணப் பிரிவினை போன்ற மாண்டுபோன சமுதாய அமைப்பை, இந்தியாவிலிருந்து அடியோடு ஒழிப்பதற்குப் பதிலாக, காந்திஜி அனாசக்தியோகம் என்று அதற்குப் புது வியாக்கியானம் செய்கிறார். இவைகளையெல்லாம் பார்த்த பிறகு, ஹரிஜன முன்னேற்றம் என்பது வெறும் கேலிக் கூத்தைத் தவிர வேறென்ன? ஒரு வேளை, சில உயர்ஜாதி ஹிந்துக்களுக்கு ஹரிஜன முன்னேற்ற இயக்கத்தால் வேலை கிடைக்கலாம். ஹரிஜனங்கள் முன்னேறுவார்கள் என்று குருடன் கூட நம்பமாட்டான்.”
“நீங்கள், தீண்டத்தகாதவர்களும் உயர்ஜாதி ஹிந்துக்களும் ஒன்றாக ஆவதை விரும்பவில்லையா?”
காலம் ஒன்றாகச் சேர்த்துவிட்டது ஓஜாஜி. ஆனால் காந்திஜிக்குப் பிரியமான மதமும், பகவானும், பழைய போக்கும், அந்த உண்மையை நாம் உணர முடியாதபடி செய்கிறது. என்னையே பாருங்கள். எனது நிறம் சிவப்பு, என் மூக்கு மெலிந்து உயர்ந்திருக்கிறது. உங்கள் நிறம் கறுப்பு. உங்கள் மூக்கு தடித்துத் தட்டையாய் இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன? என் உடம்பிலே,
ஆரிய ரத்தம் அதிகமாக இருக்கிறது. உங்கள் உடம்பிலே, எனது முன்னோர்களின் ரத்தம் அதிகமாக இருக்கிறது. உங்கள் முன்னோர்கள் வருணப் பிரிவினை அமைப்பென்ற இரும்புச் சுவரை எழுப்பி ரத்தக்கலப்பு ஏற்படாதபடி தடுக்க முயன்றார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறவில்லை. அதற்குச் சாட்சியாக, நீங்களும் நானுமே இருக்கிறோம். வால்கா நதிக்கரை ரத்தமும், கங்கை நதிக்கரை ரத்தமும் ஒன்றாகக் கலந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. இப்பொழுது நிறத்தைப் பற்றிய தகராறு கிடையாது. உங்களைப் பிராமண ஜாதியிலே சேர்த்துக் கொள்ள யாரும் மறுக்கவில்லை. மதம், கடவுள், பழம்போக்கு இவைகள் யாவும் நம்மை விட்டுவிட்டால், எல்லாம் சரியாகி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 359, புத்தகங்கள், காந்திஜி, கங்கை, உங்கள், இருக்கிறது, பக்கம், பழைய, வால்காவிலிருந்து, ரத்தமும், மூக்கு, நதிக்கரை, உடம்பிலே, அதிகமாக, ரத்தம், நிறம், பிரிவினை, செய்கிறார், முடியாது, சிறந்த, நாம், புது, உயர்ஜாதி, ஹரிஜன, வருணப், எனது