வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 358
“அவர்கள் விஷயத்தில் நீங்கள் சொல்வது சரியென்றே ஒப்புக் கொள்வோம். ஆயினும், காந்திஜியின் நேர்மையைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொள்ள முடியாதல்லவா?”
“மனிதர்கள் செய்யும் வேலை, அவர்களின் வார்த்தை இவைகளைக் கொண்டுதான், நாம் நேர்மையை அளக்க முடியும். நான் காந்திஜி பால்குடி மாறாத குழந்தையென்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆன்ட்ரூஸ் நிதிக்காக ஐந்து
லட்ச ரூபாய் தேவையென்று அவர் சொன்னார். ஐந்தே நாளில் பம்பாய் முதலாளிகள் அவருடைய பாதங்களிலே ஏழு லட்சம் ரூபாயைச் சமர்ப்பித்தார்கள். முதலாளித்துவத்திற்கு அவர் செய்யும் உதவிக்கு, இங்கிலாந்து, அமெரிக்க முதலாளிகளாயிருந்தால், ஏழு கோடியே சமர்ப்பித்திருப்பார்கள். இது கொஞ்சம் தானே.”
“இதை நீங்கள் லஞ்சம் என்று சொல்கிறீர்களா?”
“முதலாளிகள் கடவுளுக்கு எதையாவது படைக்கும் பொழுதே, தங்கள் வீட்டிலே லாபமும் சுபமும் நிறைந்திருக்க வேண்டுமென்று தானே படைக்கிறார்கள்?”
“அப்படியானால், கைத்தறியையும் ராட்டையையும் சுரண்டலைத் தடுக்கும் கருவிகள் என்று கருதவில்லையா?”
“இல்லை. அவைகள் சுரண்டலை வளர்ப்பவை என்று கருதுகிறேன்.”
“அப்படியானால், மில்கள் சுரண்டலைத் தடுப்பவையா?”
“அவைகளும் சுரண்டலுக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன. ஆனால் உலகம் கல் ஆயுதங்களை விட்டு எவ்வளவு தூரம் முன்னேறி வந்திருப்பது போல், இந்தக் கைராட்டையையும் கைத்தறியையும் விட்டு நீண்ட தூரம் முன்னேறி வந்திருக்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஓலைகளில் எழுதி வைக்கப்பட்ட புத்தகங்களை நான் பாட்னா மியூசியத்திலே பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் சேட்டுகளின் கணக்கும் நாளந்தா சர்வகலா சாலை மாணவர்களின் நூல்களும் நோட்டுப் புத்தகங்களும் கூட, இந்த
ஓலைகளிலே தான் எழுதப்பட்டு வந்திருக்கிறது. அந்த ஓலை யுகத்திற்குத் திரும்பிச் செல்லும்படி, காந்திஜி ஆயிரம் முறை திரும்பித் திரும்பிச் சொல்லட்டும்; டிட்டாகர் காகிதத்தையும், மோனோ டைப்பையும், ரோட்டரி மிஷினையும் விட்டு விட்டு, ஓலைச்சுவடிக்கு உலகம் திரும்புமா? அப்படித் திரும்பாமல் இருப்பதில் தான் உலகத்திற்கு க்ஷேமம் இருக்கிறது. சேவா கிராமத்தின் பஜனை நாமாவளிகளைப் பரப்புவதிலே ஒரு வேளை கஷ்டமில்லாமல் இருக்கலாம். ஆனால், அனேக அறிஞர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் உழைத்து இன்றுவரை சேகரிக்கப்பட்டுள்ள அறிவையும்- விஞ்ஞானத்தையும் பரப்புவதற்கு, எல்லா மனிதர்களையும் கல்வியறிவுள்ளவர்களாகச் செய்வதற்கு இவற்றின் உதவியில்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 358, புத்தகங்கள், விட்டு, செய்யும், பக்கம், நீங்கள், கங்கை, வால்காவிலிருந்து, உலகம், சுரண்டலைத், தூரம், முன்னேறி, திரும்பிச், கைத்தறியையும், ஆயிரம், வந்திருக்கிறது, தான், அவர், ஒப்புக், வேலை, சிறந்த, கொள்ள, நான், தங்கள், தானே, காந்திஜி, “அப்படியானால்