வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 355
“நம்பிக்கைப் பாதை, கெட்டதென்று கருதுகிறீர்களா சுமேர் பாபு?”
“நான் பாபு இல்லை ஓஜாஜி! ஒரு சாதாரணச் சக்கிலியனின் மகன். என் வீட்டிலே, ஒரு சிறுதுளி நிலம் கூட எனக்குச் சொந்தமில்லை. பலவந்தமாக
எங்களை வெளியேற்றி விட்டு, ஜமீன்தார் அங்கே தோட்டம் போட்டுவிட்டார். என் தாயார் எங்கோ மாவரைத்துக் கூலி வேலை செய்து தன் வயிற்றை நிரப்பிக் கொள்கிறாள். முதலில் ஒரு கனவானின் தயவிலும், பின்னால் உபகாரச் சம்பளத்தைக் கொண்டும் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இவைகளைக் கொண்டு பாபு என்ற சொல்லுக்கு நான் முற்றிலும் தகுதியில்லாதவன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.”
“சொல்லிப் பழக்கப்பட்டு விட்டது சுமேர்ஜி! உங்களுடைய பூராவிபரத்தையும் தெரிந்து கொண்டதும், உங்களைச் சந்தித்ததிலே மிகுதும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு ஹரிஜன வாலிபன், வாழ்க்கையிலே போராடி வெற்றியடைவதைக் கண்டு, காந்திஜியின் சிஷ்யன் ஒருவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்பது உங்களுக்கே தெரியும்.”
“ஓஜாஜி! உங்களுடன் அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன். நான் ஹரிஜன் என்ற வார்த்தையையே வெறுக்கிறேன். ‘ஹரிஜன்’ பத்திரிக்கை முற்றிலும் பழைய பாதையிலே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிக்கையென்று கருதுகிறேன். காந்திஜியை, எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.”
“உங்கள் ஜாதிக்கு காந்திஜி ஒரு உதவியும் செய்யவில்லையென்று கருதுகிறீர்களா?”
“மில் முதலாளிகள் மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவிதான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்தார்.”
“காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்லவில்லையே!”
“ஜெமீன்தார்கள், முதலாளிகள், சிற்றரசர்களையெல்லாம், காப்பாளர்கள் (கார்டியன்) என்று சொல்வதற்கு, வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார். நாங்கள் ஹிந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக்கொண்டு விடக் கூடாது என்பதற்காகவே அவர் பூனாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார். ஹிந்துக்களுக்கு மலிவான அடிமைகள் தேவையாயிருந்தது. ஆயிரக் கணக்கான வருடங்கள் அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது. முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தார்கள். இப்பொழுது காந்திஜி ‘ஹரிஜன்’ என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 355, புத்தகங்கள், எங்கள், காந்திஜி, முதலில், பக்கம், தெரிந்து, எங்களை, நான், கங்கை, பாபு, வால்காவிலிருந்து, ‘ஹரிஜன்’, முதலாளிகள், அடிமைகள், நாங்கள், கருதுகிறேன், எவ்வளவு, கருதுகிறீர்களா, செய்து, பாதையிலே, முற்றிலும், நீங்கள், சிறந்த