வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 34
குடிசையினுள் ஒரு புறத்தில் சமூகத்தின் ஆண், பெண் குழந்தைகள், விருத்தர்கள் யாவரும் ஒரேயிடத்தில் கூடியிருக்கின்றனர். நடுவே பூமி தோண்டப்பட்டிருக்கிறது. அதில் தேவதாருக்களின் விறகுகளைப் போட்டு நெருப்பு ஜோதி மயமாய் எரிந்து கொண்டிருக்கிறது. பெண்களும் ஆண்களும், மாறி மாறிப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன பாடுகிறார்கள்? எதைப் பற்றிப் பாடுகிறார்கள்? இதோ கேளுங்கள்:
“தீ...யே...வ...ரு...வா...யே!”
அக்கினியையா இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்? ஆம்; அதோ பாருங்கள் சமூகத் தலைவியும், சபை அங்கத்தினர்களும் நெருப்பில் மாமிசம், காய்கனிகள், தேன் முதலியவற்றைச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பௌர்ணமி தினத்தில் இவர்கள் அக்கினி தேவனை நோக்கி “எங்கள் சமூகத்திற்கு வேட்டையில் மிருகங்களும், காய்கனிகளும், தேனும் நிறையக் கிடைப்பதற்கு அருள் செய்ய வேண்டும். மிருகங்கள் முதலிய எதிரிகளால் எங்கள் சமூகத்திற்கு யாதொரு தீங்கும் நேரிடக்கூடாது” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக, இந்தப் பொருள்களைச் சமர்ப்பிக்கிறார்கள். அதோ பாருங்கள். சமூகத் தலைவி தேனை நெருப்பிலே வார்க்கிறாள். யாவரும் எழுந்து நிற்கின்றனர். பிறந்த கோலத்தோடு யாவரும் திறந்த மேனியர்களாய், நிர்வாணமாய் நிற்கின்றனர். பனிக்காலமோ கடந்துவிட்டது. இந்த வெயில் காலத்தில் மிருகங்களின் தோலைத் தங்கள் உடம்பின் தோலோடு இறுகக் கட்டிக் கொள்வதை வீண் தொந்தரவான காரியமாகக் கருதுகிறார்கள். ஆனால் திறந்து கிடக்கும் இவர்களது உடலின் ஒவ்வோர் அங்கமும் எவ்வளவு அழகாயிருக்கின்றன. இவர்களில் யாருக்காவது தொந்தி தள்ளிக் கொண்டிருக்கிறதா? எங்கேயாவது சதைகள் துருத்திக் கொண்டிருக்கின்றவா? இல்லவே இல்லை. அழகு என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும். இதற்குத்தான் ஆரோக்கியம் என்று பெயர். எல்லோருடைய முகங்களும் ஒரே மாதிரி இருக்கிறதல்லவா? ஆம்; இவர்கள் எல்லோரும் நிஷாவின் சந்தானங்கள். தந்தை, சகோதரர், புத்திரர் இவர்களுக்கு ஜனித்த குழந்தைகள், யாவரும் ஆரோக்கியமாகவும் பராக்கிரமசாலிகளாயுமிருக்கின்றனர். இவர்களுடைய இந்த உலகத்தில் ஆரோக்கியமற்றவர்களுக்கும் பலவீனர்களுக்கும் இடம் கிடையாது; இயற்கையோடும் மிருகங்களோடும் போராடி, பலவீனர்கள் வாழ முடியாது.
சமூகத் தலைவி எழுந்து சாமான்கள் வைத்திருக்கும் பக்கம் செல்கிறாள். மற்றவர்கள் ஒவ்வொருவரும் மண்ணால் செய்த பாத்திரங்கள், மண்டை ஓடுகள், மாட்டுக்கொம்புகள் இவற்றை வைத்துக் கொண்டு, மண்ணால் மெழுகப்பட்ட பூமியின்மீது உட்கார்ந்திருக்கின்றனர். கள்ளும் தேனும் நிறைந்த பாத்திரங்களைத் தலைவி கொண்டு வருகிறாள். ஆண்கள், பெண்கள், யுவதிகள், யுவர்கள், விருத்தாப்பியர், சிறார்கள் என்ற வித்தியாசமின்றி யாவரும் ஒரே இடத்தில் கூட்டமாக உட்கார்ந்து, மதுவருந்தி ஆனந்தத்தில் திளைத்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது இவர்களுக்கு ஒரு நியமம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 34, யாவரும், புத்தகங்கள், பக்கம், பாடுகிறார்கள், தலைவி, சமூகத், கங்கை, வால்காவிலிருந்து, இவர்கள், வேண்டும், தேனும், நிற்கின்றனர், கொண்டு, மண்ணால், இவர்களுக்கு, சமூகத்திற்கு, எழுந்து, செய்கிறார்கள், தங்கள், ஆண்கள், சிறந்த, குழந்தைகள், பிரார்த்தனை, கொண்டிருக்கிறார்கள், பாருங்கள், இந்தப்