வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 347
விருப்பமில்லாத ஏதோ ஒன்றைப் பற்றிய சந்தேகத்திலே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு படுத்திருந்தாள். அப்பொழுது சபதர் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார்.
“சகீனா! நான் ஒரு பெரிய முடிவிற்கு வந்திருக்கிறேன். இவ்விதம் முடிவு செய்வதற்கு முன்னால் உன்னையும் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவ்விதம் கலந்து கொள்ளாதது என்னுடைய குற்றம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அந்தக் குற்றத்தை ஏன் செய்தேனென்பதை, நான் சொல்லப்போகும் விஷயங்களால் நீயே உணர்ந்து கொள்வாய். முதலில் விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன். நான், தேசத்தின் சுதந்திரப் போராட்டத்திலே பங்கெடுத்துக் கொள்ள நிச்சயித்து விட்டேன்.”
சகீனாவின் இதயத்திலே இடியைப் போல் தாக்கின இந்த வார்த்தைகள். அவளால் வாய்திறந்து பேசமுடியவில்லை. அவள் மௌனமாய் இருப்பதைப் பார்த்த சபதர் “ஆனால் அன்பே! குழந்தைப் பருவத்திலிருந்து நீ வளர்ந்து வந்திருக்கும் முறையைத் தெரிந்து கொண்ட நான் உன்னையும் இந்தக்கல்லிலும், முள்ளிலும் இழுத்துச் செல்ல விரும்பவில்லை.”
சகீனா தனது இதயத்திலே மற்றொரு பலமான அடி விழுந்ததாக உணர்ந்தாள். இந்த இரண்டாவது தாக்குதல் முதலாவது விழுந்த அடியை மறந்து போகும்படி செய்து விட்டது. பொங்கி விழுந்த அவளது சுயமரியாதை உணர்ச்சி அவளுடைய வாய்ப்பூட்டை உடைத்து விட்டது.
“அன்பே! நீங்கள் முள்ளிலே இழுபடுவதைப் பார்த்துக் கொண்டும்
உங்கள் சகீனா கட்டிலிலே தூங்க விரும்பும் அளவிற்குச் சுகவாசியாகி விட்டாளென்று உண்மையிலேயே கருதுகிறீர்களா? நான் உங்களை மனப்பூர்வமாகக் காதலித்திருந்தால், அந்தக் காதல் உங்களோடுகூட எந்த வாழ்க்கைக்கும் தயாராகும் சக்தியை எனக்கு அளிக்கும். நான் ஏராளமான லிப்ஸ்டிக்கைச் செலவழித்திருக்கிறேன். என்னுடைய நேரத்தின் பெரும் பகுதியை அலங்காரத்திலும் சிங்காரிப்பதிலுமே செலவிட்டிருக்கிறேன். நான் கடினமான வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளக்கூட முயன்றதில்லை. ஆனால், எனக்குச் சகலமும் நீங்கள்தான். உங்களுக்குப் பாரமாயிருப்பதற்காக இதைச் சொல்லவில்லை. உங்களுக்குத் துணையாயிருக்கவே விரும்புகிறேன். எனது வாழ்க்கைக்கு இதுவரை வழிகாட்டியது போலவே எதிர்காலத்திலும் நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும்.”
சபதர் இவ்வளவு தூரம் எதிர்பார்க்கவில்லை. சகீனா பிடிவாதக்காரி என்பதும், அவள் முடிவை மாற்ற முடியாதென்பதும் சபதருக்குத் தெரியும். ஆகவே, மேலே மற்ற விஷயங்களைச் சொல்லத் தொடங்கினார்.
“நான் புதிய கேஸ்கள் எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டேன். பழைய வழக்குகளையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் கோர்ட்டுக்குப் போக வேண்டிய வேலை முடிந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 347, நான், புத்தகங்கள், சகீனா, பக்கம், சபதர், கங்கை, வால்காவிலிருந்து, தெரிந்து, அவள், இதயத்திலே, விழுந்த, விட்டேன், விட்டது, நீங்கள், கலந்து, தொடங்கினார், சிறந்த, உன்னையும், வேண்டும், என்னுடைய, அந்தக்