வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 346
“ஆக்ஸ்போர்டிலே நீ இல்லாமல் துடித்துக்கொண்டிருந்தேன், சங்கர்! நீ கூடயிருக்கும் பொழுது தூக்கு மேடையில்கூட என்னால் சிரித்துக் கொண்டே ஏற முடியும்” என்று கண்களிலே நீர் ததும்பக் கூறினார் சபதர்.
சகீனா வந்து சாப்பாட்டிற்கு அழைத்தாள். சபை கலந்தது.
2
அன்று இரவிலிருந்தே, சபதரின் முகம் மிக மலர்ச்சியடைந்திருப்பதைப் பார்த்த சகீனா, சங்கரோடு மனம் விட்டுப் பேசியதின் விளைவு என்று கருதினாள். தன்னுடைய முடிவைச் சகீனாவிடம் தெரிவிப்பதுதான் சபதருக்கு மிகக் கஷ்டமான காரியமாயிருந்தது. சபதரும் செல்லமாக வளர்ந்தவர்தான். ஆனால், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆகையால், ஏழை எளியவரின் குழந்தைகளை அனுதாபத்தோடு பார்த்துப் பார்த்துப் பழகிய அவருக்கு, தனக்கு ஏற்படப் போகும் பரீட்சையில் தேறிவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சகீனாவின் விஷயம் வேறு. அவள் நகரத்திலே பணக்காரக் குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவள். அவளைப் பொறுத்தவரை, “கல்லரக்குங் கடுமையவல்ல நின் சில்லரக் குண்ட சேவடி” என்பது முற்றிலும் பொருந்தும். ஞாயிற்றுக்கிழமை வரை அந்தப் பேச்சை எடுக்கவே சபதருக்குத் தைரியம் வரவில்லை. திங்கட் கிழமையன்று சீப்கோட்டிலே தனது நெருங்கிய
நண்பர்கள் சிலரிடம் தன் முடிவைத் தெரிவித்த பிறகும், சகீனாவிற்குச் சொல்லாமலிருப்பது தவறு என்று கருதினார்.
அன்று இரவு, அவர் லக்னௌவில் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த ‘சாம்பைன்’ வரவழைத்தார். யாரோ நண்பர்கள் விருந்துக்கு வரப்போகிறார் களென்று சகீனா கருதினாள். ஆனால் சாப்பாட்டிற்குப் பிறகு சாம்பைனைத் திறந்து கொண்டு வரும்படி அவர் வேலைக்காரனுக்கு உத்தரவிட்ட பொழுது, சகீனாவிற்குக் கொஞ்சம் ஆச்சரியம் ஏற்பட்டது. சபதர், சாம்பைன் கிளாஸை சகீனாவின் உதடுகளிலே வைத்து; “என் அன்பே! சகீனா! எனக்கு நீ கொடுக்கும் கடைசிப் பிரசாதம் இதுதான்” என்று கூறினார்.
“குடிப்பதை விட்டுவிடப் போகிறீர்களா?”
“அதுமட்டுமல்ல, இன்னும் சிலவற்றையும்; ஆனால் உன்னை விட்டுவிட மாட்டேன் சகீனா! இனிமேல் நீ தான் எனது மது! எனது கண்கள் உனது அழகைப் பருகிப் பருகி கள்வெறி கொள்ளும்” என்று கூறிக் கொண்டு வரும் பொழுதே சகீனாவின் முகம் கோணுவதைக் கண்ட சபதர், “சகீனா நாம் பேச வேண்டுவது இன்னும் அதிகம் இருக்கிறது. முதலில் இந்தச் சாம்பைன் போத்தலைத் தீர்த்து விடுவோம்” என்றார்.
சகீனாவிற்குச் சாம்பைனிலே சுவை ஏற்படவில்லை. சாம்பைன் கிளாஸு களைத் தீர்ப்பதற்கு, உமர்கயாத்தின் எத்தனையோ ரூபயாத்துக்களைச் சபதர் உபயோகித்தார். என்றாலும், சகீனாவின் மனம் அதிலே முற்றிலும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 346, புத்தகங்கள், சகீனா, சகீனாவின், சபதர், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, சாம்பைன், சகீனாவிற்குச், முற்றிலும், நண்பர்கள், கொண்டு, இன்னும், எனது, அவர், மனம், கூறினார், பொழுது, சிறந்த, அன்று, முகம், பிறந்து, கருதினாள், பார்த்துப்