வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 344
“நீ ஏழேழு தலைமுறைக்கும் நல்லாயிருக்க! நீ காந்திஜியைப் புகழத் தொடங்கியதும், நீயும் கூடப் பள்ளிக்கூடங்களையும், காலேஜ்களையும் சைத்தானின் தொழிற்சாலைகள் என்று சொல்லப் போகிறாயோ எனப் பயந்தே போய் விட்டேன்.”
“கல்வி முறைகளிலே குறைகள் இருக்கலாம். ஆனால் இன்றைய பள்ளிக்கூட-காலேஜ்களிலிருந்துதான் நாம் விஞ்ஞானத்தைத் தெரிந்து கொள்ள
முடிகிறது. விஞ்ஞான அறிவில்லாத மனிதன், இன்றைய உலகில் மனிதனே அல்ல. நமது சுதந்திரம் என்று கிடைத்தாலும், அதைப் பெறுவதற்குப் பெருந்துணையாயிருந்தது. விஞ்ஞானமாகவே இருக்கும். நாள் தோறும் பெருகிக் கொண்டு வரும் மனித ஜாதியின் எதிர்காலமும் சுக வாழ்வும், அந்த விஞ்ஞானத்தையே நம்பி இருக்கிறது. ஆகவே விஞ்ஞான அறிவை விட்டுவிட்டுத் திரும்பிச் செல்வது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும். பள்ளிக்கூடங்களையும், காலேஜ்களையும் மூடிவிட்டு கைராட்டையையும், கைத்தறியையும் கற்றுக் கொடுக்கும் பாடசாலைகளை ஏற்படுத்துவது, மக்களை முற்றிலும் இருட்டுக்குள் இழுத்துச் செல்வதாகும். ஆனால் புரட்சிச் சேனையை அமைப்பதற்கு மாணவர்களைத் தூண்டுவது கெட்டதல்ல என்பதை நீயும் ஒப்புக் கொள்வாய்.”
“நிச்சயமாக. ஆனால், மற்ற பகிஷ்காரங்களைப் பற்றி என்ன?”
“கோர்ட்டுகளைப் பகிஷ்கரிப்பது சரி, இதன்மூலம் நாம் நமது அன்னிய ஆளும் வர்க்கத்தினருக்கு நம்முடைய வெறுப்பையும் ரோஷத்தையும் காட்டமுடிகிறது. அன்னியச் சாமான் பகிஷ்காரமோ, ஆங்கில வியாபாரிகளின் கன்னத்திலே ஒரு பலமான அறை. மேலும் அது, நமது உள்நாட்டுத்தொழில்கள் வளர்வதற்கும் உதவி செய்கிறது.”
“நீ ரொம்பத் தூரம் போய்விட்டாய் என்று தோன்றுகிறது சபதர்!”
“இன்னுமில்லை. ஆனால், இப்பொழுது போக விரும்புகிறேன்.”
“போக விரும்புகிறாயா?”
“முதலில், நாம் இப்பொழுது ஒரு புரட்சி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறாயா, இல்லையா?”
“உன்னுடைய கருத்தைப் பூரணமாகத் தெரிந்து கொள்வதற்காகத் தான் நான் அநேகம் கேள்விகள் கேட்டேன். சபதர், ருஷ்யாவிலே புரட்சி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 344, புத்தகங்கள், நான், கருதுகிறேன், பக்கம், காலேஜ்களையும், நமது, நாம், பள்ளிக்கூடங்களையும், வால்காவிலிருந்து, அந்த, கங்கை, என்பதை, தான், சபதர், இப்பொழுது, புரட்சி, விஞ்ஞான, தெரிந்து, சிறந்த, நீயும், இன்றைய, விட்டு, அவர்