வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 343
“கற்பனை மிக அழகாகத்தான் இருக்கிறது.”
“இது வெறும் கற்பனையல்ல சங்கர்! உலகத்தின் ஆறிலொரு பாகமான
ருஷ்யாவிலே, 1917ம் வருடம் நவம்பர் மாதம் 7ம் தேதி பொது உடைமை அரசாங்கம் ஏற்பட்டு விட்டது. இன்றும்கூட முதலாளித்துவ உலகம் மனித சமுதாயத்திற்கு ஒரே ஒரு நம்பிக்கையான அந்தப் பொது உடைமை அரசாங்கத்தை அழித்து விட விரும்புகிறது. ஆனால் முதலில் ஏற்பட்ட பலமான பரீட்சையிலேயே சோவியத் அரசாங்கம் தேறி விட்டது. ஹங்கேரியில் ஏற்பட்ட பொது உடைமை அரசாங்கத்தை, ஆறு மாத காலத்திற்குள் பிரான்ஸ்-அமெரிக்க முதலாளிகள் கொன்று விட்டார்கள். ஆயினும் ருஷ்ய சோவியத் அரசாங்கம், உலகத் தொழிலாளர்கள்- விவசாயிகளுக்குத் தூண்டுதலும் நம்பிக்கையுமாகும். ருஷ்யாவிலே சோவியத் ஆட்சியை ஸ்தாபித்து இந்த சக்தி உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்து கொண்டிருக்கிறது. யுத்தம் முடிந்ததும், அவசர அவசரமாக ரௌலட் சட்டத்தை ஏன் நமது அரசாங்கம் பாஸ் செய்தது? உலகத்தின் புரட்சிகரமான அந்த சக்தியை ஒடுக்குவதற்காகத் தான். அந்த புரட்சிகரமான சக்தி உலகத்தை மாற்றுவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பரவ முயலாவிட்டால் ஆங்கிலேயர்கள் இந்த ரௌலட் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். காந்திஜியும் அதற்கு விரோதமாகக் கிளர்ந்தெழும் படி ஜனங்களைத் தூண்டியிருக்கமாட்டார். ஜனங்களும் விழித்தெழுந்திருக்கமாட்டார்கள். 1857க்குப் பிறகு சாம்பல் மூடிக் கிடந்த தணல் மறுபடியும் சுடர் விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி இருக்காது. ஆகையால் தான் நாம் இப்பொழுது புரட்சி யுகத்திலே நுழைந்து கொண்டிருக்கிறோம். என்று நான் சொன்னேன்.”
“காந்திஜி புரட்சிகரமான தலைவர் என்று நீங்கள் கருதுகிறீர்களா? கோகலே போன்ற மிதவாதத் தலைவரைத் தனது குருவென்று சொல்லும் காந்திஜி, புரட்சிக் காரராய் இருக்க முடியுமா?”
“காந்திஜியின் எல்லாக் கருத்துக்களும் எல்லா செயல்களும் புரட்சிகரமானது என்று நான் ஒப்புக் கொள்ளவில்லை, சங்கர்! புரட்சிச் சக்தியின் மூலா
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 343, புத்தகங்கள், அரசாங்கம், பொது, உடைமை, ஒவ்வொரு, உலகத்தின், பக்கம், சோவியத், அந்த, கங்கை, வால்காவிலிருந்து, சக்தி, புரட்சிகரமான, ஏற்பட்ட, ரௌலட், தான், அரசாங்கத்தை, நான், நாட்டிலும், கொடுங்கள், மறுபடியும், தொழிலாளர்கள், சிறந்த, உற்பத்தி, வேலை, ருஷ்யாவிலே, சங்கர், விட்டது