வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 33
தோன்றுகிறது. ‘உதாரணமாகத் திவாவையே எடுத்துக் கொள்வோம். அவளுக்குத் தாயில்லை. அவள் அநேக குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள். அவளுடைய குழந்தைகள் யாவும் திவா புத்திரர்கள்-புத்திரிகள் என்றே அழைக்கப்படுகின்றனர். இப்படியிருந்த போதிலும் இவர்களுக்குச் சொந்தமான உடமை (மாமிசம்-பழங்கள் முதலியன) எதுவும் கிடையாது. சமூகத்தின் ஒவ்வொருவரும் அவர்கள் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி சேர்ந்தேதான் தேட வேண்டும். சேர்ந்தேதான் அனுபவிக்க வேண்டும். ஒன்றும் கிடைக்கவில்லையானால் சேர்ந்தே தான் பட்டினி கிடக்க வேண்டும்; சமூகத்திற்கல்லாமல் தனிப்பட்ட யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. சமூகத்தின் ஆணையை, சமூகத்தின் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவது அவர்கள் ஒவ்வொருவருடைய மனதுக்கும் பிடித்ததாகவும் சுலபமானதாகவுமேயிருந்தது.
இங்கு இவர்கள் கட்டியிருக்கிறார்களல்லவா குடிசை, இதுவும் நிரந்தரமானதல்ல. இந்தப் பிரதேசத்தில் மிருகங்கள், காய்கனிகள் கிடைக்கும் வரைதான் இங்கே தங்குவார்கள். அப்பால் வேறொரு பிரதேசத்திற்குப் போய்விடுவார்கள். அடுத்து எந்தப் பிரதேசத்திற்கு இந்த மிருகங்கள் போயிருக்கும் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் இது இவர்களுக்குத் தொன்றுதொட்டு வரும் பழக்கம். இங்கிருந்து இவர்கள் போய்விட்ட பின் இந்த வீட்டின் கூரை விழுந்துவிட்டாலும் மரங்களாலும் கற்களாலும் கட்டப்பட்டிருக்கும் சுவர்கள் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும். இவர்கள் அடுத்த பிரதேசத்திற்குப் போனவுடன், குடிசை கட்டுவதற்கு இவர்களுக்குத் தேவையானது புற்கள்தான். பழைய சுவர்களில் புற்களைப் போட்டு வேய்ந்து குடிசைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இந்தக் குடிசையில் ஒரு பக்கம் சாமான்களை வைத்துக் கொள்வதற்கும், மற்றப் பக்கம் சமைத்துக் கொள்வதற்குமாக ஒதுக்கிக் கொள்கிறார்கள். மண்ணைக் கொண்டு பாத்திரங்கள் செய்ய இவர்களுக்குத் தெரியும். மண்டை ஓடுகளையும் பாத்திரங்களாக உபயோகப்படுத்துவார்கள். பச்சை மாமிசத்தை வேகவைத்தும் தின்பார்கள். ஆனால், உலர்ந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிட அவர்கள் விரும்புவதில்லை. வால்கா நதியின் இந்தப் பிரதேசத்தில் தேன் அதிகமாகக் கிடைக்கிறது. ஆகையால் தேன் குடிக்கும் கரடியும் இங்கு அதிகம். நிஷா- ஜனங்களுக்குத் தேனின் மீது மிகுந்த பிரியம். தேனை ருசிக்காக மட்டுமல்ல. போதைப் பொருளாகவும் கருதி அருந்துவார்கள்.
இவர்களுக்குப் பாடவும் தெரியும். ஆண்களும் பெண்களும் இனிமையாகப் பாடுவார்கள். எல்லா வேலைகளையும் இவர்கள் சேர்ந்து செய்வதோடு திருத்தமாகவும் அழகாகவும் செய்கிறார்கள். சேர்ந்து கூட்டமாக வேலைசெய்யும் பொழுதெல்லாம் சங்கீதம் முக்கிய ஸ்தானம் பெறும். சங்கீதம் வேலையின் சிரமத்தை மறைத்துவிடுகிறதல்லவா? ஆனால், இவர்கள் இன்று பாடுவது, வேலை செய்யும் போது எல்லோரும் சேர்ந்து பாடுவார்களே அந்தமாதிரிப் பாட்டுகளாகத் தெரியவில்லை. இங்கே முறைவைத்த மாதிரி ஒரு தடவை பெண்கள் மிருதுவான குரலில் சேர்ந்து பாடுகிறார்கள். அதைத்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 33, பக்கம், இவர்கள், புத்தகங்கள், சேர்ந்து, இவர்களுக்குத், வால்காவிலிருந்து, வேண்டும், தெரியும், கங்கை, சமூகத்தின், பிரதேசத்திற்குப், தேன், சங்கீதம், இங்கே, கொள்கிறார்கள், குடிசை, கிடையாது, சிறந்த, சேர்ந்தேதான், இங்கு, பிரதேசத்தில், இந்தப், மிருகங்கள்