வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 336
இப்பொழுது சங்கருக்கும் சகீனாவுக்குமிடையே மன்னி கொழுந்தன் முறை
உறுதிப்பட்டுப் பல வருடங்களாகி விட்டன. சகீனா தன் விருப்பப்படியே தனக்குக் குழந்தைகள் பிறக்காதபடி செய்து கொண்டு விட்டாள். ஆனால், அடிக்கடி அவள் சங்கரின் குழந்தைகளை வைத்துக் கொண்டு பொழுதுபோக்குவாள். ஆறு வருடகாலமாக, ‘சங்கர’-சபத ரின் தயவு தன் மீது அதிகமாய் இருப்பதாய் சங்கர் கருதினார். ஏனெனில் அவர் வீட்டில் எப்போதும் இரண்டு வயதிற்குக் குறைவான குழந்தை இருந்து கொண்டேயிருக்கும்.
கடந்த ஒருவார காலமாக சாஹிப் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதை, சகீனா கவனித்து வந்தாள். ஆகவே இன்று சங்கரின் வரவு அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் சாகிப்பின் மனப்பாரத்தைக் குறைக்கும் சக்தி சங்கர் ஒருவருக்குத்தான் உண்டு என்பது அவளுக்குத் தெரியும். சகீனா சங்கரைப் பார்த்துக் கொண்டே, “சங்கர், இன்று உனக்கு வீட்டிலே ஒன்றும் அதிக வேலையில்லையே? மன்னி கையால் செய்யும் ‘சாக்லட் புட்டிங்’ குக்காகக் காத்திருக்கலாமல்லவா?” என்று கேட்டாள்.
சபதர்-“இது நல்ல ஒழுங்கு, வேணுமா என்று கேட்பது?”
சகீனா-“நான் முதலிலேயே ஏன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றால் கொழுந்தனார் சாகிப்பிற்குத் தான் ஒன்றும் நிச்சயம் இல்லையே. நான் தயாரித்த பிறகு அவர் மாயமாய் மறைந்துவிட்டால்...?”
சங்கர்-“எனக்கு அநியாயம் செய்யாதே மன்னி! எப்பொழுதாவது உன் உத்தரவை மீறியிருக்கிறேனா? ஒரு உதாரணம் சொல் பார்ப்போம்.”
சகீனா-“உத்தரவை மீறுவதைப் பற்றி நான் சொல்லவில்லை. மைத்துனரே; உத்தரவைக் கேட்காமலேயே தப்பி ஓடி விடுவதும் குற்றம்தான்.”
சங்கர்-“நான் எனது ‘ஜெனரல்’ மன்னி சாஹிப்பின் உத்தரவைக் கேட்பதற்கு எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கிறேன்.”
சகீனா-“நல்லது! நான் போகிறேன். இன்று இரவுச் சாப்பாட்டுடன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 336, சகீனா, சங்கர், புத்தகங்கள், மன்னி, பக்கம், கங்கை, இன்று, நான், வால்காவிலிருந்து, கொண்டு, உத்தரவைக், அவர், ஒன்றும், “நான், ஏனெனில், பற்றி, சபதர், சிறந்த, வீட்டிலே, பிறகு, அவள், சங்கரின்