வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 332
கடைசியாக, கங்கையின் படகிலே அவனை இருபுறமும் ஆங்கிலச் சிப்பாய்கள் வளைத்துக் கொண்ட பொழுது, பிந்தாசிங், தேவராம், சதாவல் பாண்டே, ரஹிம்கான், குலாம் ஹு சேன் ஆகிய ஐவரும் அவனோடு கூடவே இருந்தார்கள். கைதியாயிருந்த ஆங்கிலேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆங்கில ஜெனரல் சரணடைந்துவிடும்படியும் அவனை நிச்சயமாக மன்னிப்பதாகவும் பல முறை தெரிவித்தான். ஆனால் மங்களசிங் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி முறையாக ஜெனரல், நேரிலே சத்தம் போட்டுச் சொல்லிய பொழுதும், அதற்குப் பதிலாக மங்களசிங்கிடமிருந்து வந்தது துப்பாக்கிக் குண்டுதான். ஆறு பிரதேங்கள் இருந்த அந்தப் படகை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பொழுது எல்லா ஆங்கிலேயர்களும் இந்தியாவின் இணையற்ற வீரத்திற்குத் தலைகுனிந்து வணக்கம் செலுத்தினார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 332, புத்தகங்கள், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, ஜெனரல், பொழுது, மங்களசிங், சிறந்த, அவனை