வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 32
திவா:- “ஆம். இதோ இந்தப் புஷ்பங்களைப் பார். சூரன்தான் இவற்றை எனக்குச் சூட்டினான்.”
யுவ:-“சூர! நீ புஷ்பங்களைக் கொண்டு நன்றாக அலங்கரிக்கிறாயே! என்னுடைய கூந்தலிலும் அலங்கரிக்க மாட்டாயா?”
திவா:-“இன்றைக்கு முடியாது; இன்றைக்கு அவன் எனக்குச் சொந்தம்.”
யுவ:-“அப்படியானால் சூரன் நாளை என்னுடையவன்.”
திவா:-“நாளைக்கா? இல்லை; நாளைக்கும் என்னுடையவனே.”
யுவ:-“தினந்தோறும் அவன் உனக்கே சொந்தமா? அது சரியில்லை, திவா.”
திவா தன்னுடைய தப்பிதத்தை உணர்ந்து கொண்டாள். “தினந்தோறுமில்லை. இன்றைக்கும் நாளைக்கும் மட்டுந்தான்” என்றாள்.
கொஞ்சங் கொஞ்சமாகப் பல யுவர்களும் யுவதிகளும் அங்கு வந்து கூடினர். ஒரு பெரிய கருப்பு நாய் சூரனுடைய கால்களை வந்து நக்கிற்று. அப்பொழுதுதான் அவனுடைய ஆடுகள் அவன் ஞாபகத்துக்கு வந்தன. உடனே திவாவிடம் ஏதோ சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.
2
ஒரு பெரிய விசாலமான குடிசை. அதன் சுவர்கள் மரங்களாலானவை; புல்லால் வேயப்பட்ட கூரை. கல்லால் செய்யப்பட்ட கத்திகள்,
எவ்வளவுதான் கூர்மையாயிருந்தாலும், இவ்வளவு மரங்களையும் அவற்றைக் கொண்டு வெட்டுவது முடியாத காரியம். ஆனால் மரங்களை வெட்டுவதற்கு அவர்களுக்கு நெருப்பும் உதவி செய்கிறது. அந்தக் கல் கத்திகள்-அநேக காரியங்களுக்கு-ஆயுதமாக உபயோகமாகிறதென்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் இவ்வளவு பெரிய குடிசையைக் கட்டியிருக்கிறார்களே? ஆச்சரியம்தான். அந்தக் குடிசையில்தான் நிஷா ஜனங்கள் (நிஷா என்ற பெயருடைய பழைய காலத்துப் பெண்ணின் பரம்பரை) பூராவும் வசிக்கின்றனர். யாவரும்-ஒரே குடும்பமாக. இந்தக் குடும்பத்திற்கு-சமூகத்திற்கு ஒரு பெண் தலைவி. இந்தச் சமூகத்தை ஒரு பஞ்சாயத்து நிர்வகிக்கிறது. அந்தப் பரிவாரத்தினுடைய வாழ்க்கையின் எந்த அம்சமும் இந்தச் சபையின் நிர்வாகத்திற்கு அடங்காத தல்ல. வேட்டையாடுதல், நடனம் ஆடுதல், காதல் செய்தல், குடிசை கட்டுதல், தோலினால் பாத்திரங்கள், கருவிகள் செய்தல், எல்லாக் காரியங்களையும் இந்தச் சபைதான் நடத்துகிறது; இந்தச் சபையில் தாய்க்குத்தான் முதல் ஸ்தானம். நிஷா-ஜனங்களின் இந்தக் குடிசையில், ஆண்களும் பெண்களுமாக 150 பேர் வசிக்கின்றனர். அப்படியானால் இத்தனை பேரும் ஒரே குடும்பமா? இல்லை; இதில் பல குடும்பங்கள் இருக்கின்றனவென்றே சொல்ல வேண்டும். ஏனெனில், தாய் உயிருடனிருக்கும்போதே அவளுடைய மக்களில் பலர் ஒரு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 32, திவா, புத்தகங்கள், இந்தச், நிஷா, பெரிய, பக்கம், அவன், வால்காவிலிருந்து, கங்கை, அந்தக், இவ்வளவு, செய்தல், வசிக்கின்றனர், இந்தக், நாளைக்கும், எனக்குச், சிறந்த, கொண்டு, இல்லை, குடிசை, வந்து, கத்திகள்