வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 328
நானாசாகிப்-“மத விரோதிகளின் ஆட்சியை ஒழித்துக்கட்டுவது அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமல்லவா?”
மங்களசிங்-“இந்தக் கேள்வியை உங்களிடமே கேட்டால் நீங்கள் என்ன பதில் கொடுப்பீர்கள்? உங்கள் மனதிலே பீஷ்வாவின் தலைநகரான பூனாவிற்குத் திரும்பச் செல்ல வேண்டுமென்று ஆசையில்லையா? நவாப் அவர்களின் மனதிலே லக்னௌவின் சிம்மாசனத்தைப் பெறும் ஆவல் இல்லையா? நீங்கள் எல்லோரும் கொழுப்புதடவிய குண்டையும் ஆங்கில ஆட்சியையும் ஒழிப்பதோடு திருப்தி அடையாமல் வேறு சில பெரிய ஆசைகளையும் உடையவர்களாய் இருக்கும்போது, தங்கள் உயிரையே பணயமாக வைத்துப் போராடும் சிப்பாய்களுக்கும், பொது ஜனங்களுக்கும் வேறு
சில பலன்களும் கிடைக்குமென்று தெளிவுப்படுத்துவதுதான் நல்லது என்று தான் நினைக்கிறேன்.”
நானாசாகிப்-“என்ன பலன்கள்?”
மங்களசிங்-“நாம் மறுபடியும் ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்தை ஏற்படுத்துவோம். அதன்மூலம் ஜனங்களுக்குக் குறைவான செலவில் நியாயம் கிடைக்கச் செய்வோம். தேசம் முழுவதற்கும் சேர்ந்து ஒவ்வொரு கிராமத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்துவோம். அதன் அதிகாரம் சக்கரவர்த்தியையும் கட்டுப்படுத்தும். நாம் ஜமீன்தாரி முறையை ஒழித்து விடுவோம். அரசாங்கத்திற்கும் விவசாயிக்கும் நடுவிலே, தரகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். யாருக்காவது அரசாங்கம் ஜாகிர் கொடுக்குமானால், அவர் விவசாயிகளிடமிருந்து சர்க்காருக்குக் கிடைக்கவேண்டிய அளவு வாரத்தை மட்டும் தான் பெற்றுக் கொள்ளலாம். நாம் இயந்திரத் தொழிற்சாலைகளைப் பெருக்கி இங்குள்ள எல்லாவித தொழிலாளிகளுக்கும் வேலை கிடைக்கும்படி செய்வோம். இங்கு யாரும் வேலையின்றிப் பட்டினி கிடக்க விடமாட்டோம். நீர்ப்பாசனத்திற்கு வேண்டிய கால்வாய்கள், குளங்கள், அணைக் கட்டுகள் எல்லாவற்றையும் சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். அதன் மூலம் அதிகமான விளைவும் விவசாயிகளின் வாழ்கையிலே சுகமும் உண்டாகும்படி செய்வோம் என்றெல்லாம் நாம் தெளிவாகப் பொது ஜனங்களுக்கு விளக்க வேண்டும்.”
மங்களசிங் கூறிய விஷயத்தை யாரும் கவனம் செலுத்தி ஆலோசிக்கவில்லை. அவையெல்லாம், ஆட்சி கைக்கு வந்தபின் யோசிக்க வேண்டிய விஷயங்கள் என்று தட்டிக் கழித்து விட்டார்கள்.
எல்லோரும் கலைந்துபோன பிறகு மங்களசிங் கட்டிலிலே போய்ப்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 328, புத்தகங்கள், மங்களசிங், நாம், வால்காவிலிருந்து, பக்கம், செய்வோம், கங்கை, யாரும், ஒவ்வொரு, தான், கிராமத்திலும், ஏற்படுத்துவோம், பொது, வேண்டிய, பஞ்சாயத்தை, மனதிலே, என்ன, சிப்பாய்களுக்கும், சிறந்த, வேண்டும், நானாசாகிப், வேறு, எல்லோரும், நீங்கள், பெரிய