வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 329
சிருஷ்டிகளை ஏற்றுக்கொள்ளாமல் தப்பமுடியாது. இங்கு போடப்பட்டுள்ள நீண்ட ரயில் பாதைகள், தந்தி மரங்கள், கப்பல் துறைகள் யாவும் இந்தியாவிலிருந்து போய்விட மாட்டாது. ஆகவே, இந்தச் சுயநலக்காரச் சிற்றரசர்களைக் கண்டு நான் பயப்பட வேண்டியதில்லை. உலகத்தின் மனித சமுதாய வளர்ச்சிக்குக் காரணமாயுள்ள ஜன சமுதாயத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
3
1857 மே 10-ம் தேதி மீரட்டின் சிப்பாய்கள் கலகக் கொடியை உயர்த்திய பொழுது, மங்களசிங் அங்குதான் இருந்தான். சக்கரவர்த்தி பகதூர்ஷாவின் பிரதிநிதி என்ற ஹோதாவில் சிப்பாய்களின் ஒரு பகுதியைத் தனது செல்வாக்கின் கீழ்க் கொண்டுவர அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தியசிற்றரசர்கள் மங்களசிங்கின் தகுதியை நன்றாக உணர்ந்திருந்தார்கள். ஆனால் அவனுடைய நோக்கமும் தங்கள் நோக்கமும் முற்றிலும் வேறுபட்டவை என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகவே, மங்கள சிங்கை டெல்லியை நோக்கி அனுப்பாமல் கிழக்குநோக்கி அனுப்பி வைத்தார்கள். மீரட்டிலிருந்து கிழக்கே செல்லும் பாதையும், மேற்கே செல்லும் பாதையும், அந்த இந்திய சுதந்திரயுத்தத்தின் விளைவை நிர்ணயிப்பதிலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை கொண்டிருந்தன என்பது யாருக்குத் தெரியும்? டெல்லி நோக்கிச் சென்ற சேனைக்கு மங்களசிங்கைப் போன்ற தலைவன் இருந்திருந்தால், டெல்லி நகர மக்களையும் பிரபலஸ்தர்களையும் தங்கள் வெற்றிக்காக அவன்
உபயோகித்துக்கொண்டிருப்பான். மங்களசிங்கின் கோஷ்டியிலே ஆயிரத்துக்கும் அதிகமான சிப்பாய்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 329, புத்தகங்கள், தங்கள், நீண்ட, கங்கை, வால்காவிலிருந்து, பக்கம், நோக்கமும், மங்களசிங்கின், பாதையும், டெல்லி, ஆகவே, செல்லும், தெரியும், கப்பல், அவனுடைய, சிறந்த, ரயில், தந்தி, வெற்றி, அந்த