வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 323
கிணற்றுத் தவளைப் போக்கை மாற்றி, அகில உலகத்தோடும் எங்களைத் தொடர்பு கொள்ளும்படி செய்தன. இந்த அவதத்தை எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி ஏதாவது ஓர் எழுச்சியைத் தூண்டிவிடக்கூடும். இந்த மாதிரி ஒரு நிலையைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.”
“மார்க்ஸின் சிஷ்யனிடமிருந்து வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?”
2
கங்கையின் அமைதி நிறைந்த கரைகளிலே மறுபடியும் அமைதியற்ற சூழ்நிலை தோன்றிற்று. பிட்டூரின் விசாலமான மாளிகையிலே பேஷ்வாவின் வாரிசு உரிமை மட்டுமல்ல, பென்ஷனும் மறுக்கப்பட்ட நானா அவத ராஜ்யம் ஆங்கிலேயர்களால் கவர்ந்து கொள்ளப்பட்ட நாள்முதல் மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்தார். அவருடைய ஆட்கள் பதவி இழந்து விட்ட மற்ற அரசர்களிடமும், தலைவர்களிடமும், இரவும் பகலும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவருடைய அதிர்ஷ்டவசமாக ஆங்கிலேயர்களும் ஒரு பெரிய தவறைச் செய்தார்கள். சரியாகப் பார்த்தால் அது ஒரு தவறல்ல. நாள்தோறும் முன்னேறிக்கொண்டிருக்கும் புதிய உலகத்திலே வாழ்வதற்காகச் செய்ய வேண்டிய வேலை. அவர்கள் முன்னால் உபயோகத்திலிருந்த குண்டு போட்டுச் சுடும் துப்பாக்கியை மாற்றிவிட்டு, அதற்குப் பதிலாக சக்திவாய்ந்த தோட்டாக்களை உபயோகிக்கும் துப்பாக்கிகளைத் தங்கள் ராணுவத்திற்குக் கொடுத்தார்கள். அந்தத் துப்பாக்கியினால் தோட்டாக்களை நிரப்பும்பொழுது, அவைகளைப் பல்லினால் கடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஆங்கிலேயர்களின் விரோதிகள் இந்தச் சம்பவத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அந்தத் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருப்பதாயும், ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே இந்தத் தோட்டாக்களைக் கொடுத்துச் சிப்பாய்களைப் பல்லினால் கடிக்கச் செய்வதாயும் அதன் மூலம் இந்து முஸ்ஸீம்களின் மதங்களை ஒழித்துவிட்டு எல்லோரையும் கிறிஸ்தவர்களாக்க முயற்சிப்பதாயும் பெரிய கூச்சலைக் கிளப்பி விட்டார்கள்.
காசி அரசன் சேத்சிங்கின் பேரன் மங்கள சிங்கினுடைய பெயர், சிப்பாய்களிடையே மின்சாரத்தைப் போன்று வேகமாக வேலை செய்து வந்தது. இந்த ரகசியத்தை வெளிப்படுத்தவே இல்லை. நானாவுக்கும் மற்ற கலகத் தலைவர்களுக்கும் அவனைப்பற்றித் தெரிந்திருந்தது. மிகக் குறைவு. அவன் ஆங்கில ஆட்சியைப் பலமாக வெறுக்கிறான் என்பதும், அவன் இங்கிலாந்திற்குப் போய் ஆங்கிலேயரின் கல்வியை நன்றாகக் கற்றிருக்கிறானென்பதும், அரசியல் விவகாரங்களிலே ரொம்பக் கெட்டிக்காரனென்பதும், அவன் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இங்கிலாந்தில் போய் வசித்ததால் அவனுடைய ஹிந்துத்தன்மை போய் விட்டது என்பதுமே, அவர்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 323, புத்தகங்கள், வேலை, பக்கம், அவன், வால்காவிலிருந்து, போய், கங்கை, அந்தத், பல்லினால், கொழுப்பும், தோட்டாக்களை, மற்ற, சிறந்த, கொடுத்தார்கள், அவருடைய, பெரிய, வேண்டிய