வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 322
“இல்லை; அப்படி நான் கருதவில்லை; ஆனால், நீங்கள் இந்தியச் சகோதரிகளை விட உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் என்றுதான் கூற விரும்புகிறேன்.”
“அடிமைத்தனத்திலே உயர்ந்தது-தாழ்ந்தது என்று வேறு உண்டா? பார்லிமெண்டுக்கு ஓட்டுப்போடும் உரிமை கூட எங்களுக்குக் கிடையாது. பெரிய பெரிய கலாசாலைகளின் வாயிற்படியிலே நாங்கள் கால் வைக்கக் கூட முடியாது. நாங்கள் இடுப்பை இறுக்கி இறுக்கிச் சிறுகச் செய்து பூமியைத் துடைத்துக் கொண்டு ஆண்களின் விளையாட்டுப் பொருள்களாயிருக்கிறோம். நல்லது, இந்தியாவிலே தொழிற்பெருக்கமும் முதலாளித்துவமும் வளருமென்றும் அதன் காரணமாக ஒரு பக்கத்தில் மக்களின் தைரியமும், நம்பிக்கையும் பெருகுவதோடு, மற்றொரு புறத்தில் கிராமங்களிலே வேலையற்றிருக்கும் விவசாயிகளும் தொழிலாளிகளும் தொழில் நகரங்களிலே கூடுவார்களென்றும், பிறகு அவர்கள் தங்கள் தொழிற்சங்கங்களை ஸ்தாபித்துப் போராடக் கற்றுக் கொள்வார்களென்றும், இதன் பின்பு பொது உடைமைக் கொடியின் கீழ் இங்கிலாந்தின் தொழிலாளர்களோடு தோளோடு தோள் நின்று மனித சுதந்திரத்திற்காகப் போராடி, உலகத்திலிருந்து முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி-சுதந்திரம்-சகோதரத்துவம் நிறைந்த ராஜ்யத்தை ஸ்தாபிப்பார்களென்றும், மார்க்ஸ் நம்பிக்கை ஊட்டுகிறார்! ஆனால், இவையெல்லாம் நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்பு நடக்கக் கூடியவை.”
“ஆங்கிலேயர்கள், விஞ்ஞானம் உலகிற்களித்த இயந்திரத் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மறைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் விஞ்ஞானத்தின் மற்றொரு கொடையான யுத்த ஆயுதங்களை, இந்தியச் சிப்பாய்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த இந்தியச் சிப்பாய்கள் இந்தியாவின் சுதந்திரத்தைத் திரும்பப் பெறுவதற்கு உபயோகமாவார்கள் என்று மார்க்ஸ் கருதுகிறார்.”
“இது சமீபத்தில் நடக்கக் கூடியதா மங்கி?”
“சமீபத்தில் இல்லை ஆனீ! அந்த நேரம் வந்துவிட்டது. இந்த (1856) பிப்ரவரி 7ம் தேதி அவத ராஜ்யத்தை ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டுவிட்டார்கள் என்ற செய்தியைப் பத்திரிக்கையிலே பார்த்தாய் அல்லவா?”
“ஆம்; அயோக்கியத்தனமான முறையிலே.”
“அயோக்கியத்தனமான முறையிலா அல்லது யோக்கியமான முறையிலா என்பதைப் பற்றி நாம் இப்பொழுது தர்க்கம் செய்ய வேண்டியதில்லை. ஆங்கிலேய வியாபாரிகள் எல்லாவற்றையும் தங்கள் சுயநலத்திற்காகவே செய்கிறார்கள். ஆனால் தங்களை அறியாமலே எங்களுக்கு நன்மை பயக்கும் படியான காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அவர்கள் கிராமக் குடியரசு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 322, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, இந்தியச், பின்பு, ராஜ்யத்தை, நடக்கக், முறையிலா, கற்றுக், மார்க்ஸ், நாங்கள், சிறந்த, என்பதைப், பெரிய, மற்றொரு, தங்கள்