வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 321
“நீ சொல்லுவது சரிதான். சார்ட்டிஸ்டு* களுடைய மேடைப் பேச்சுக்கள், பத்திரிகைகளின் செல்வாக்கு உனது கருத்திலே படிந்திருக்கிறதல்லவா?”
“அந்தப் பொதுக்கூட்டங்கள் நடந்த காலத்தில் நான் அவ்வளவு பெரியவளல்ல; அதைப் பற்றிய நினைவு ஏதோ புகைப்படலம் போல்தான் ஞாபகமிருக்கிறது. ஆனால் இங்கிலாந்தின் மந்திரிசபையிலே சார்ட்டிஸ்டுகளின் பரம விரோதியாயிருந்த என் சித்தப்பா ரஸல் அந்தப் பயங்கர இயக்கத்தைப் பற்றிச் சொல்வதை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.”
“ஆனி! பன்னிரெண்டு லட்சம் மக்களின் கையெழுத்தோடு, தொழிலாளர்களின் சாதாரணத் தேவையைக்கோரி வந்த மகஜரைத் தூக்கியெறியும் பொழுது, அவர் பார்லிமெண்டிலே காட்சியளித்ததைப்போல, வீரப் பேச்சாளராகவே இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்பொழுதும் காட்சியளித்தாரா?”
“இல்லை அன்ப! இந்த 1856-ம் வருடத்தில் சார்ட்டர் வாதத்தைப் பற்றிப் பேச்சே கிடையாது. என்றாலும் அவர் இப்பொழுதுங்கூட அதைப் பற்றிப் பயப்படுகிறார்.”
“ஏன் பயப்படமாட்டார்? பிரபுக்களுடையவும், ஜமீன்தார்களுடையவும் ஆட்சியை ஒழித்துவிட்டு, முதலாளிகளான வியாபாரிகள் தங்கள் ஆட்சியை
ஆரம்பித்துவிட்டார்கள். அதைப்போலவே தொழிலாளர்களும் இந்தப் பணப்பைகளின் ஆட்சியை ஒழித்துக் கட்டிவிட்டு மனித சமுதாயத்தின் ஆட்சியை ஏற்படுத்தியே தீருவார்கள், அதிலே பணக்காரன்-ஏழை, சின்னவன்-பெரியவன், கறுப்பன்-வெள்ளையன் என்ற வேற்றுமைகள் இருக்காது.”
“ஆண்-பெண் என்ற வேற்றுமையுமா?
“ஆம், பெண்களும், ஆண்களின் கொடுமையால் வாடுகிறார்கள். எங்கள் நாட்டிலே பிரபுத்துவ ஆட்சியானது சமீப காலம்வரை சதியென்ற பெயரால் லட்சக்கணக்கான பெண்களை நெருப்பிலிட்டுப் பொசுக்கிற்று. இப்பொழுதுங்கூட, அவர்களைப் படுதாவிற்குள் மூடிவைத்து சொத்து உரிமையில்லாமல் செய்து, கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இது மனித சமுதாயத்திற்கே ஒரு களங்கம்.”
“எங்கள் நாட்டிலே பெண்கள் படுதாவுக்குள் மூடி வைக்கப்பட
____________________________________________________
*சார்ட்டிஸ்டுகள் சாஸன இயக்கத்தார். 1832-ம் வருடத்து இங்கிலாந்தின் சீர்திருத்தச் சட்டம் திருப்தியளிக்க வில்லையென்று ஆறு அம்சங்கள் கொண்ட மக்கள் சாஸனம் என்ற ஒரு சாஸனத்தைத் தயாரித்து, 1839-ல் 800,000 பேர் கையெழுத்திட்டு காமன்ஸ் சபையிலே சமார்ப்பித்தார்கள். இந்தச் சாசனத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஒரு பெரிய இயக்கத்தை நடத்தியவர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 321, புத்தகங்கள், ஆட்சியை, பக்கம், வால்காவிலிருந்து, பற்றிப், கங்கை, இப்பொழுதுங்கூட, நாட்டிலே, மனித, அதைப், சிறந்த, சட்டம், இங்கிலாந்தின், அவர்