வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 310
கொடுத்தது. பிரியும் பொழுது கோல்மேன் சொன்னான்.
“நண்ப! இப்பொழுது நாம் பத்தொன்பதாவது நூற்றாண்டிலே காலெடுத்து வைக்கிறோம். உலகத்திலே பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்களிலே நாமும் பங்கு கொள்ள வேண்டும். அதற்கு முக்கியமான ஆரம்பவேலை, அச்சாபீஸை ஏற்படுத்திச் செய்திப் பத்திரிகைகளைத் தோற்றுவிக்க வேண்டும். மக்களுக்கு உலக நிகழ்ச்சிகளைப் பற்றிப் பரந்த அறிவை உண்டாக்க வேண்டும்.”
3
இவ்வருடம் மழை நன்றாகப் பெய்யவில்லை. ஆடி மாதத்தில் கருகிப்போன புல் பூண்டுகளெல்லாம் கருகியபடியே இருந்துவிட்டன. நெல், கேப்பை, கோடைப்பயிர் எதுவும் விளையவில்லை. பட்டினியால் மாண்டவர் பலர். பசி தாங்காமல் ஊரைவிட்டு ஓடினர் சிலர்! துர்தேஹத்தின் பெரிய ஏரி வற்றிவிட்ட பொழுது, ஐம்பது மைல் சுற்றுப் புறத்திலே உள்ள ஜனங்கள் எல்லோரும் அதன் வயிற்றிலே வந்து கூடிவிட்டார்கள். தாமரையின் வேர்களையும், அடித் தண்டுகளையும் தோண்டித் தின்பதற்காக அவர்கள் கூடியிருந்தார்கள். அந்த முயற்சியிலே, அவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டதுண்டு.
மறுவருடம் மழை பெய்தது. முதலில் விளைந்த கேப்பைப் பயிர்களைச் சேகரிப்பதிலே ஈடுபட்டிருந்த ரேக்காபகத் தன் மனைவி மங்கரியைக் கண்டு ஆச்சரியப்பட்டான். கடந்த ஒரு வருட காலத்திலே, உலகம் எங்கிருந்து
எங்கோ போய்விட்டது. கிராமத்தின் ஏராளமான ஜனங்கள் இறந்து விட்டார்கள். பலர் அங்குமிங்குமாகச் சிதறிப் போய் விட்டார்கள். இந்தச் சூழ்நிலையிலும் தங்கள் இருவருடைய உயிரும் உடலைவிட்டுப் போகாத்து மட்டுமல்ல, தாங்கள் இருவரும் பிரியாமல் ஒன்றாக இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டான். இதற்காக, அவன் துர்தேஹத்தின் ஏரிக்கு நன்றி செலுத்த வேண்டும்.
முன்னாலும் மழையில்லாமல் பஞ்சம் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால், விவசாயிகள் இவ்வளவு பயங்கரமான கஷ்டத்தை இதற்குமுன் அனுபவித்ததே இல்லை. அந்தக் காலத்தில் ஒரே ஓர் அரசாங்கம்தான் இருந்தது. அதற்குச் செலுத்த வேண்டிய வரியும் மிகக் குறைவு. இப்பொழுது கம்பெனியின் அரசாங்கமும், அதற்குக் கீழே பலம் பொருந்திய ஜமீன்தாரின் அரசாங்கமும் இருக்கிறது. அவர்களுடைய சிப்பாய்கள், சேவகர்களுடைய உதையிலிருந்து, எலும்பும் தோலுங்கூடத் தப்புவது கடினம். இப்பொழுது ஒரு வருட உழைப்பின் பலனாகக் கிடைக்கும் வரு மானம். ஒன்றரை மாதச் சாப்பாட்டிற்குக் கூடப் போதுமானதாய் இல்லை. பஞ்சத்திற்காக விவசாயிகள் எங்கிருந்து மிச்சம் பிடித்து வைப்பார்கள்?”
மார்கழி மாதத்தில் மங்கரி ஓர் ஆண் குழந்தையைப் பெற்ற போது, ரேக்காவின் ஆச்சரியம் எல்லையைக் கடந்து விட்டது. தனது ஐம்பதாவது
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 310, புத்தகங்கள், வேண்டும், பக்கம், இப்பொழுது, பொழுது, பெரிய, கங்கை, வால்காவிலிருந்து, செலுத்த, விட்டார்கள், எங்கிருந்து, விவசாயிகள், வருட, இல்லை, அரசாங்கமும், பலர், அந்த, சிறந்த, மாதத்தில், துர்தேஹத்தின், கண்டு, ஜனங்கள், ஆச்சரியப்பட்டான்