வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 311
முடியாத இந்தப் பஞ்ச காலத்திலே அவள் ஒரு புது உயிரை எப்படிக் காப்பாற்றித் தோற்றுவித்தாள் என்றுதான் ஆச்சரியப்பட்டான். பஞ்சத்தில் பிறந்த குழந்தை ஆகையால், அவனுக்குப் பஞ்சன் என்ற பெயரும் வைத்தான்.
மாசி மாதம் ராம்பூரின் ஜமீன்தார் தனது யானை, குதிரை, சிப்பாய் சேவகர்களுடன் தயாளபூருக்கு விஜயம் செய்தார். ஜமீன்தாருடைய வீட்டிலே யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையென்று ரேக்கா கேள்விப்பட்டிருந்தான். தயாள்பூரில் ஜமீன்தாரின் கச்சேரி ஊரின் ஒரு கடைசியிலே இருக்கிறது. அதைச் சுற்றி இருபத்தைந்து ஏக்கர் மாந்தோட்டம் ஒன்றுண்டு. அதற்குத் தண்ணீர் இறைப்பது வெட்டுவது, கொத்துவது போன்ற வேலைகளை தயாள்பூர் விவசாயிகள் ஊழியத்திற்குச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐம்பது மரங்கள் வீதம் ஒதுக்கி விடப்பட்டிருந்தது. அதில் ஒரு மரமாவது உலர்ந்து போய்விட்டால், ஒன்றேகால் ரூபாய்வீதம் அபராதம் விதிக்கப்படும். ரேக்காவிற்குப் பிந்திய தலைமுறை, ஜமீன்தாரி முறை அநாதி காலந்தொட்டு இருந்து வருவதாக நம்பப் போகிறது. ரேக்காவிற்கும் சோபரனுக்கும் தெரிந்துள்ள ஜமீன்தாரி முறைக்கு முந்திய பஞ்சாயத்து ஆட்சி, அவர்களுக்கு வெறும் கற்பனைக் கதையாகப்படும். ஜமீன்தாரின் சேவகர்கள் இந்தப் பஞ்சத்திற்குப் பிறகு இன்னும் கடுமையாகிவிட்டார்கள். இந்தப் பஞ்சம் விவசாயிகளின் மனோதிடத்தை ஒடுக்கவும், எஜமானர்களின் பிடிப்பை அதிகப்படுத்தவுமே வந்திருக்கிறது என்று அவர்கள் கருதினார்கள். மார்கழி மாதத்தில் ரேக்காவின் குடிசை மீது படர்ந்திருந்த சுரைக் கொடிகள் பிஞ்சும்
பூவுமாகக் காட்சியளித்தபோது, எஜமானர்களின் சேவகர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால் ரேக்காவின் நடவடிக்கை, பஞ்சத்திற்குப் பிறகும் மிகக் கடுமையாகிவிட்டது என்று ஜனங்கள் சொல்லும்படி இருந்தது. ரேக்கா தன் செயலில் புதுமை எதுவும் இருப்பதாகக் கருதவில்லை. உண்மை என்னவெனில், பஞ்சத்தின் கொடுமையால், தாக்கப்பட்டு கிராமவாசிகள் எல்லோரும் ரொம்ப ஒடுங்கிப் போய்விட்டார்கள். அவர்களோடு ஒப்பிட்டால் ரேக்கா கொஞ்சம் உயரத்தில்தான் இருந்தான். இதைத்தான் கடுமையென்று மற்றவர்கள் கருதினார்கள். சேவகர்கள் தனது சுரைக்கொடியைச் சுற்றுவதை அவன் வெறுத்தான். என்றாலும் அதை வாய்விட்டுச் சொல்லவில்லை. ஒரு நாள் ஒரு சேவகன், சுரைக்காய் பிடுங்குவதற்காக அவனுடைய கூரையில் ஏறினான். அப்பொழுது தன் மகனை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த ரேக்காவிற்கு கூரையில் ஆள் ஏறும் அரவம் கேட்டது. அவன் வெளியே வந்து பார்த்தான். சேவகன் கூரை மீது உட்கார்ந்து கொண்டு சுரைக்காய் பிடுங்கிக் கொண்டிருந்தான். மூன்று காய்களைப் பிடுங்கிவிட்டான். நான்காவதை ஒடித்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த ரேக்காவிற்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. அவன் கிராமமெங்கும் கேட்கும்படிக் கூச்சலிட்டு, “யாரது?” என்று கத்தினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 311, புத்தகங்கள், பக்கம், இந்தப், அவன், வால்காவிலிருந்து, சேவகர்கள், கங்கை, ரேக்கா, மீது, ரேக்காவின், சுரைக்காய், கொண்டிருந்தான், ரேக்காவிற்கு, கூரையில், கருதினார்கள், சேவகன், அதைச், அவள், குழந்தை, சிறந்த, வைத்துக், தனது, பஞ்சத்திற்குப், ஜமீன்தாரி, ஜமீன்தாரின், எஜமானர்களின்