வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 307
“அடிமைப் பழக்கத்தை ஒழிப்பதற்கு, எங்கள் நாட்டிலே பலத்த கிளர்ச்சி நடக்கிறது.”
“சீமையிலும் அடிமைப் பழக்கம் உண்டா?”
“அகில உலகத்திலும், அந்தக் கதியற்ற ஆண்களும் பெண்களும் சந்தையிலே விற்கப்பட்டுத்தான் வருகிறார்கள். சீமையிலே இதற்கு விரோதமான சட்டம் விரைவிலே நிறைவேறி விடுமென்று நான் நம்புகிறேன்.”
“ஆனால் அடிமைகளின் எஜமானர்களான பணக்காரர்கள் என்ன செய்வார்கள்?”
“பணக்காரர்கள் அதை விரும்பத்தான் மாட்டார்கள். எங்கள் பார்லிமெண்டிலே பணக்காரர்களின் செல்வாக்குதான் அதிகம். ஆனால்,
அவர்களிலும் அனேகர் இதை வெறுக்கிறார்கள். மனிதரை மனிதன் விற்பதும்-வாங்குவதும் வெறுக்கத் தக்க செய்கைதானே! ஆனால் பாவம்- புண்ணியத்தைக் கருதி இந்த அடிமைத் தனத்தை ஒழிக்க அவர்கள் முயற்சிக்கவில்லை. அதற்கு உண்மையான காரணம் வேறு. இன்றையத் தொழிற்சாலைகளிலே, பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் வேலை செய்கின்றன. அவற்றின் விலை மிக அதிகம். அடிமைகள் அதைப் பாழாக்கி விடக்கூடும். இப்பொழுது அடிமைகளுக்குப் பெரிய வேலைகளைக் கொடுப்பதில்லை. அவர்களுடைய வாழ்வும்-சாவும் தங்களுக்கு விளையாட்டாய் இருக்கும்பொழுது அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்களுக்குப் பெரிய நஷ்டத்தை உண்டாக்குவதின் மூலம் பழி வாங்க விரும்புவார்கள் என்று, பணக்காரர்கள் நினைக்கிறார்கள்.”
“தாயையும் குழந்தைகளையும் தனித் தனியாகப் பிரித்து விற்கப்படுவதைப் பார்க்கும் பொழுது என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.”
“எவன் இதைச் சகித்துக் கொள்கிறானோ, அவன் மனிதனே அல்ல.”
“பிரான்ஸிலே ராஜா இல்லாத ராஜ்யம், இதற்கென்ன பெயர் சொன்னீர்கள் சாகிப்?”
“குடியரசு.”
“குடியரசென்ன முடியாட்சியை விட உயர்ந்ததா?”
“குடியரசு எல்லாவற்றையும் விட உயர்ந்த ஆட்சி. அரசர்கள், மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள் இவர்களுக்காக தேசத்தின்
வருமானத்தில் பெரும்பகுதி செலவாகி விடுகிறது. குடியரசிலே இந்தச் செலவு இருக்காது. அரசர்கள் ஆட்சியை விட அதிக நியாயமும் நேர்மையும் மக்களிடத்திலே அனுதாபமும் இருக்கும்.”
“நான் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்து நிர்வாகத்தைப் பார்த்திருக்கிறேன். அதிலே உண்மையில் அதிகமான நியாயம் இருந்தது. செலவு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 307, புத்தகங்கள், பெரிய, பக்கம், எங்கள், வால்காவிலிருந்து, கங்கை, அரசர்கள், “குடியரசு, செலவு, பணக்காரர்கள், சிறந்த, அதிகம், சகித்துக்