வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 306
“ஜமீன்தார்களின் கொடுமையால், உலகத்தின் மக்களெல்லாம் அழுத்தப்பட்டுக் கிடக்கிறார்கள். ஆனால் இவர்களின் வாழ்வு இன்னும் சில நாளைக்குத்தான்.”
“அது எப்படி சாகிப்?”
“பிரான்ஸின் அரசனையும், ராணியையும் சில வருஷங்களுக்கு முன்னால் ஜனங்கள் கொன்று போட்டார்கள். அந்த ஜனங்களின் கோபாக்கினியிலே எத்தனையோ ஜமீன்தார்களும் ஜாகீர்தார்களும் எரிந்து சாம்பலாகிவிட்டார்கள். ஜமீன்தாரி முறையே அங்கு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஜனங்கள் எல்லோருக்கும் சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற கொள்கை விளம்பரப்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் நான் பிரான்ஸிலே இருந்தேன். பிரான்ஸின் ராஜமாளிகையிலே, பிரெஞ்சுக் குடியரசின் மூவர்ணக் கொடி பறப்பதை நான் பார்த்தேன். இங்கிலாந்திலும், அரசனும், ஜமீன்தார்களும், அப்பொழுது ‘வெடவெட’ வென்று நடுங்கிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்திலும், பிரான்ஸைப் போலவே காரியங்கள் நடந்திருக்கும். ஆனால், மற்றொரு விஷயம் அவர்களைக் காப்பாற்றிவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்.”
“அது என்ன விஷயம் சாகிப்?”
“சீமைத் தொழிற்சாலைகளிலிருந்து, எத்தனையோ பொருள்கள் இந்தியாவின் சந்தையிலே வந்து குவிவதை நீ பார்க்கிறாயல்லவா? அதனால் எங்கள் நாட்டுச் சேணியர்களும் நூல்நூற்பவர்களும் வேலையை இழந்துவிட்டார்கள். எங்கள் நாட்டிலே முதலாளிகள் புதிய புதிய தொழிற்சாலைகளைத் திறந்து அதில் ஜமீன்தாரின் கொடுமையால் பட்டினி கிடந்து வாடும் ஜனங்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். அவர்கள் செய்து குவிக்கும் சாமான்கள் தான் இங்கு வந்து குவிகின்றன. இதுவரை எங்கள் நாட்டு இயந்திரங்கள் கையாலேயே ஓட்டப்பட்டு வந்தன. இப்பொழுது நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் துணிகளும் சாமான்களும் மிக மலிவாகப் போய்விடும். உங்கள்நாட்டுத் தொழிலாளர்களின் கதி அதோகதிதான். எங்கள் நாட்டுத் தொழிலாளர்களின் கதியும் மோசந்தான்.
ஆயினும், அவர்கள் இந்தத் தொழிற்சாலைகளிலே வேலை செய்து வயிற்றை நிரப்பி விடமுடியும். இந்தத் தொழிற்சாலைகள் தோன்றாவிட்டால் பிரான்ஸின் நிலைமை எங்கள் நாட்டிலும் ஏற்பட்டிருக்கும். மனிதன், மனிதனைப் போல வாழ வேண்டும். மற்றவர்களை மிருகங்களாக நடத்தும் மனிதன், தானும் தனது குழந்தை, குட்டிகளும் கூட மிருகங்களாக ஆக நேரும்.”
“நீங்கள் சொல்வது சரிதான் சாகிப்! நான் என்னுடைய அடிமைகளையும் வேலைக்காரர்களையும் மனிதர்களாகக் கருதுவதில்லை. ஆனால் துரைமார்கள் என்னிடம் அதே மாதிரி நடக்கத் தொடங்கிய போதுதான் மனிதனுக்கு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 306, எங்கள், புத்தகங்கள், நான், பக்கம், சாகிப், வால்காவிலிருந்து, கங்கை, வந்து, வேலை, தொழிலாளர்களின், மிருகங்களாக, மனிதன், இந்தத், விஷயம், செய்து, ஜமீன்தார்களும், கொடுமையால், அப்பொழுது, சிறந்த, “அது, ஜனங்கள், பிரான்ஸின், எத்தனையோ, இங்கிலாந்திலும்