வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 286
தோடர்மல்-“ஆனால், நண்ப! நாம் முஸல்மான்களை ஹிந்துவாக்கவோ, ஹிந்துக்களை முஸல்மான்களாக்கவோ விரும்பவில்லை.”
அபுல்பஜல்-“ஆம், நாம் இருவரையும் ஒன்றாக்க விரும்பினோம். ஒரே ஜாதி, ஒரே சமுதாயத்தைச் சிருஷ்டிக்க ஆசைப்பட்டோம்.”
பீரபல்-“ஆனால், முல்லாக்களும், பண்டிதர்களும் நம்மைப் போல் கருதுவதில்லை. நாம் பாரத நாட்டைப் பலமுடையதாகச் செய்ய விரும்புகிறோம். பாரத தேசத்திலே கத்தியின் பலமிருக்கிறது; அறிவின் பிரகாசமிருக்கிறது! வாலிபத்தின் தைரியம் இருக்கிறது. ஆனால், ஒரு பெரிய குற்றம்-மிகப் பெரிய பலவீனமும் இருக்கிறது. அதுதான் துண்டு துண்டாகப் பிரிந்து கிடப்பது. பாரதத்தின் கத்திகள் தங்களுக்குள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் ஒன்று சேர்ந்து விட்டால்!”
அக்பர்-“எனக்கு இந்த ஒரே ஓர் ஆசைதான் எனது அன்புள்ள தோழர்களே! இதற்காக நாம் எவ்வளவோ காலம் போராடி இருக்கிறோம். நாம் இந்த வேலையைத் தொடங்கிய காலத்தில், எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஆனால், இப்பொழுது அந்த நிலைமை அல்ல. ஒரு தலைமுறையில் எவ்வளவு சாதிக்க முடியுமோ, அவ்வளவையும் செய்திருக்கிறோம். ஆயினும், உன்னுடைய இந்தக் கழுதை-குதிரை உபமானம் கல்லைப் போல என் மனத்திலே உட்கார்ந்து விட்டது.”
அபுல்பஜல்-“ஜலால்! நாம் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. உன் தந்தையாரின் காலத்தோடு இப்பொழுதைய நிலையை ஒப்பிட்டுப்பார். அந்தக்காலத்தில் ஜோதிபாய் உன் மனைவியாகி அரச மாளிகையிலே விஷ்ணுவின் சிலையைப் பூஜை செய்ய முடியுமா?”
அக்பர்-“வேற்றுமை இருக்கிறது பஜல்! ஆனால் நாம் இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கிறது. நான் ஒரு முறை, ஒரு பிரெஞ்சுப் பாதிரி
மூலம் அவர்கள் நாட்டிலே சக்கரவர்த்தி கூட ஒன்றிற்கு அதிகமான கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கேள்விப்பட்டேன். இந்தப் பழக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தோடர்! நீ என்னுடைய இளம் வயதிலே, இந்தக் கருத்தை என் வாயாலேயே கேள்விப்பட்டிருப்பாய். நான் அப்படி நடக்க முடிந்ததா? சக்கரவர்த்தி, தீமைகளைச் செய்வதற்கு எவ்வளவு உரிமை உடையவனாய் இருக்கிறானோ, அவ்வளவு நன்மையைச் செய்வதற்கில்லை. அது எவ்வளவு வேடிக்கை? என்னால் முடிந்திருந்தால், சலீமின் தாயாரைத் தவிரவேறு யாரையும் அந்தப்புரத்திற்குள் அனுமதித்திருக்க மாட்டேன். இன்று சலீமிற்காவது இந்த ஏற்பாட்டைச் செய்ய முடிந்தால்!”
பீரபல்-“ஜலால்! காதல் ஒருவரிடந்தான் ஏற்பட முடியும். அன்னப்பறவைகளின் அன்பு ஜோடியைக் காணும்பொழுதெல்லாம், அவைகளின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 286, நாம், புத்தகங்கள், இருக்கிறது, எவ்வளவு, பக்கம், செய்ய, அபுல்பஜல், “ஜலால், வால்காவிலிருந்து, கங்கை, அக்பர், பெரிய, நான், சக்கரவர்த்தி, இந்தக், இளம், நம்முடைய, சிறந்த, கொள்ள, முடியும், பீரபல், “ஆனால், பாரத