வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 280
சுரையா
காலம் : கி.பி. 1600
மண் கலந்த மழை நீர் நாலாபக்கமும் பரவி ஓடிக்கொண்டிருந்தது. சம பூமியிலே ஓடிய நீர் பள்ளங்களிலே விழுந்து சிறிய சிறிய கால்வாய்களின் உருப்பெற்று, அவைகள் ஒன்று சேரும்போது, அகண்ட மலை நதிகள் போல் காட்சியளித்தன. மரங்கள் தன்னுள்ளே கவர்ந்து வைத்திருந்த மழை நீரைப் பெரிய பெரிய துளிகளாக உதிர்த்துக் கொண்டிருந்தன; மழை நின்றுவிட்டாலும், தூவானம் தூறிக்கொண்டே இருந்தது. ஒரு வன்னிமரத்தின் கீழே வெண்ணிற யுவதி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய தலைமீது கிடந்த வெள்ளைப் போர்வை நன்றாக நனைந்து விட்டது. அதன் கீழே இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த கருங்கூந்தலின் மத்திய ரேகையில் ஹிமாலயத்தைக் கிழித்துக் கொண்டோடும் கங்கையைப்போல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. காதிலே வந்து படிந்திருந்த மயிர்க்கற்றையிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. பனியைப் போன்ற வெளுமையான முகத்திலே இரண்டு பெரிய கறுப்புக் கண்கள் ஏதோ ஒரு பொருளைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. அவளுடைய முழங்கால் வரை தொங்கும் பட்டுச் சட்டை நனைந்து நெஞ்சோடு ஒட்டிப் போய்விட்டது. அதற்குள்ளே சிவப்புப்பட்டினால் கட்டப்பட்டிருந்த இளங்குரும்பை போன்ற ஸ்தனங்கள், நனைந்த சட்டைக்கு மேல் அழகாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. அவளுடைய நீண்ட பைஜாமாவும் காலோடு காலாய் ஒட்டியிருந்தது. செம்மண் நீரிலே நனைந்து அவளுடைய வெள்ளைச்
செருப்புக்கள் நிறமாறிப் போயிருந்தன. தண்ணீரிலே ஊறிப்போன அந்தச் செருப்புக்கள், நடப்பதற்கும் உபயோகமற்றதாய் இருந்தன.
அந்த யுவதியை நோக்கி ஒரு வாலிபன் வந்து கொண்டிருந்தான். அவனுடைய குஞ்சம் வைத்த தலைப்பாகையும் சட்டையும், பைஜாமாவும்கூட வெண்ணிறமானவையே. அவனும் மழையிலே நன்றாக நனைந்து போயிருந்தான். அவன் நெருங்கி வருமளவும், அவனை யுவதி கவனிக்கவில்லை, அவனும் ஓசையின்றி மெதுவாக நடந்து வந்து அவளுக்குப் பக்கத்திலே நின்று கொண்டான். அவள் திரும்பிப் பார்ப்பாள் என்று கருதி யுகங்களைப் போன்ற எத்தனையோ விநாடிகளைக் கழித்துவிட்டான். அவள் தலைமயிரிலிருந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 280, புத்தகங்கள், நனைந்து, அவளுடைய, கொண்டிருந்தன, பெரிய, வந்து, பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, செருப்புக்கள், அவள், அவனும், நன்றாக, கீழே, சிறந்த, நீர், சிறிய, யுவதி, நின்று