வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 274
உணரவில்லை. இன்று நீங்களும் உணரவில்லை. உணர்ந்திருந்தால் அவர்கள் வீட்டில் உங்களுக்கும் மரியாதை கிடைத்திருக்கும்.”
3
சித்திரை மாதம் முடிந்துவிட்டது. மரங்களிலெல்லாம் புதிய இலைகள் நிறைந்திருந்தன. இவ்வருடம் மாமரங்கள் நிறையக் காய்த்திருந்தமையால், அவற்றின் பழைய இலைகள் கூட உதிரவில்லை. மத்தியானத்தின் கடுமையான வெயிலிலே அந்த மாமரத்தின் நிழலில் விவசாயிகள் கூடியிருந்தார்கள். நெல்லடிக்கும் களம் அங்கே செதுக்கிச் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது, அங்கு களைத்துப் போய் வந்த ஒரு வழிப் போக்கன் அந்தக் களத்திலே ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் தோற்றத்திலிருந்து வெளியூர்க்காரன் என்று தெரிந்து கொண்ட மங்கள சௌதரி பக்கத்திலே வந்து,
“ராம்ராம், பாயி! இந்த வெயிலிலே நடந்து வருவது ரொம்பக் கஷ்டமான காரியம்.”
“ஆம், ஆனால் நடக்க வேண்டியவர்கள், வெயிலையும் நிழலையும் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?”
“நாக்கு உலர்ந்து போய் இருப்பதுபோல் தெரிகிறது. கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இந்தப் பானையில் குளிர்ந்த தண்ணீர் இருக்கிறது.”
“நீங்கள் எந்தக் குலம்?”
“அஹிர் குலம், என் பெயர் மங்கள சௌதரி.”
“சௌதரி! என்னிடம் லோட்டாவும் கயிறும் இருக்கின்றன. நான் பிராமணன். கிணறு இருக்கும் இடத்தைத் தெரிவித்தால் போதும்.”
“நீங்கள் சொன்னால் என் மகனை அனுப்பித் தண்ணீர் கொண்டு வரச்சொல்கிறேன் பண்டிட்ஜீ!”
“நல்லது, கொண்டுவரச்செய்யுங்கள், நானும் களைத்திருக்கிறேன்.” மங்கள சௌதரி தன் மகன் கீசாவைக் கூப்பிட்டுக் கிணற்றிலிருந்து புதிய நீரும், ஒரு துண்டு வெல்லமும் கொண்டு வரும்படி கூறினான். வழிப்போக்கன் டெல்லி அங்கிருந்து இருபது கோச தூரத்தில் இருக்கிறதென்றும், இன்றே அங்கு போய்ச் சேர முடியாதென்றும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். மங்கள சௌதரி எப்பொழுதும் வேடிக்கையாகப் பேசும் சுபாவ
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 274, புத்தகங்கள், சௌதரி, மங்கள, வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, தண்ணீர், குலம், கொண்டு, தெரிந்து, “நீங்கள், வெயிலிலே, எந்தக், சிறந்த, பெயர், உணரவில்லை, அங்கு, இலைகள், போய்