வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 273
“ஆம், ஏனெனில் மகத்தான உண்மையை சிறு குடுக்கைகளிலே அடைத்துவைக்கும் சக்தி எங்களுக்கு இல்லையென்று நாங்கள் நினைக்கிறோம். இஸ்லாம், தனது பக்தர்களின் தியாகத்தால் எப்படி உண்மையை நிலைநாட்டியதோ, வேதாந்திகள் தங்களின் தியாக ரத்தத்தால் எவ்விதம் தங்கள் கொள்கைகளை உறுதிப்படுத்தினார்களோ, அதேபோலவே ஹிந்துக்களும் உங்கள் வாள்களுக்குக் கீழே சிரித்துக் கொண்டே கழுத்தைக் கொடுப்பதன் மூலம், ஹிந்து தர்மத்தின் உண்மையை நிலைநாட்டியிருக்கிறார்கள்.”
“ஹிந்து தர்மத்திற்கு உண்மைக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் கிழக்கு, நாம் மேற்கு, முற்றிலும் நேர் விரோதம்.”
“அவ்வளவு நேர் விரோதமிருந்தால், இன்று மாலையில் நடந்ததைப் போல் இந்த ஏழை விவசாயிகள் முஸ்லீம் மடத்திற்கு ஏன் மரியாதை செலுத்துகிறார்கள்? முஸல்மான்களிடத்திலே ஹிந்து தன்மையின் வாசனைகூட வீசக்கூடாதென்று நினைக்கிறீர்களா?”
“ஆம், எதுவும் இருக்கக்கூடாது.”
“அப்படியானால் முதலில் நமது சுமங்கலி முஸ்லீம் பெண்களின் சிந்தூரப் பொட்டை அழித்துவிடச் செய்யுங்கள்.”
“அழித்துவிடச் செய்வோம்.”
“சிந்தூரத்தை அழித்துவிடச் செய்வீர்களா, அவர்கள் உடம்பிலே உயிர் இருக்கும்வரை? ஜும்மன்! நீ சொல், உன்னுடைய சலீமா இதை ஒப்புக் கொள்வாளா?”
“இல்லை, பாபா! மௌல்வி சாஹிப்பிற்கு விஷயம் தெரியாது. விதவைகள்தான் சிந்தூரத்தை அழிப்பார்கள்” என்று பக்கத்திலே நின்ற
ஜு ம்மன் சொன்னான்.
“மன்னிக்க வேண்டும் மௌல்வி சாஸிப்!ஸுபியர்களாகிய நாங்கள் சுல்தான்கள் கொடுத்த நிலத்துண்டிலோ பணக்காரர்களின் தானத்திலோ வாழவில்லை. நாங்கள் கோவணமும், சிறு துண்டும் கட்டிக் கொண்டு தான் இங்கு வந்தோம். எங்களைக் கண்டு எந்த ஹிந்துவும் தங்கள் வாளை உருவவில்லை. இந்த மடத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். இது முதலிலே பௌத்த மடமாக இருந்தது. எங்கள் ஐந்து தலைமுறைகளுக்கு முந்திய குரு பௌத்த பிக்ஷுவின் சீடராயிருந்தார். போலி வேஷமல்ல. இந்த வேதாந்தக் கருத்துக்களே அவரைப் புகாராவிலிருந்து இழுத்துவந்தன. வேதாந்தக் கருத்துக்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. வெயிலியிருந்து வரும் சீடர்களை அவை வெறுப்பதில்லை. அவர்கள் பௌத்தர்களாயினும் சரி, ஹிந்துக்களாயினும் சரி, முஸல்மான்களாயினும்சரி, அந்தக் குருவிற்குப் பிறகு இந்த மடம் முஸல்மான் என்று பெயர் வைத்துக் கொள்ளும் பக்கீர்களுக்குச்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 273, புத்தகங்கள், உண்மையை, பக்கம், நாங்கள், கங்கை, வால்காவிலிருந்து, மௌல்வி, அழித்துவிடச், பௌத்த, வேதாந்தக், முஸ்லீம், ஹிந்து, “ஆம், சிறு, தங்கள், சிறந்த, நேர்