வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 272
“அந்த ஜோதி எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறது. ஒளி உள்ள இடத்தில் இருள் இருக்க முடியாததைப் போல ஆத்ம ஜோதி இருக்குமிடத்தில் நாஸ்திகத் தன்மையிருக்க முடியாது.”
“உங்களுடைய இந்த வேதாந்தம் இஸ்லாம் காட்டிய பாதையை விட்டு விலகிச் செல்வதாகும்.”
“நாங்கள் உங்கள் கருத்துக்களை வழி தவறியதென்று சொல்வதில்லையே. எல்லா நதிகளும் ஒரு சமுத்திரத்திலேயே கலக்கின்றன என்ற கொள்கையுடையவர்கள் நாங்கள். நல்லது, நீங்கள் மக்கள் எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?”
“ஆம், ஒப்புக்கொள்கிறேன்.”
“அந்த நாயகன் சர்வசக்திமான் என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?”
“ஆம்.”
“மௌலானா சாஹிப்! அந்த சர்வ சக்திமானான நாயகனின் உத்தரவின்றி ஒரு சிறு இலையுங்கூட அசையாதென்றால் இந்தக் கடவுளின் குழந்தைகளை நாஸ்திகர்கள் என்று சொல்வதற்கு நாம் யார்? ஆண்டவன் விரும்பினால் அவர்கள் எல்லோரையும் ஒரே வழியில் நடத்துவான். அவன் விரும்பவில்லை என்றால் எல்லா வழிகளும் அவனுக்குச் சம்மதம் என்றுதானே அர்த்தம்?”
“ஷாஹ் சாஹிப், உங்களுடைய வேதாந்தப் பொய்களையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்.”
“ஆனால் மௌலானா! நான் இஸ்லாமிய நோக்கத்தில் இவைகளைச் சொன்னேன். ஸுபியர்களாகிய நாங்கள் ‘அல்லாஹ்’ ‘பகவன்’ இரண்டையும் வெவ்வேறாகக் கருதுவதில்லை. சத்தியமாகிய நானே தெய்வம் என்பதுதான் எங்கள் தாரக மந்திரம். எங்கும் அந்தப் பேரொளி நிறைந்திருக்கிறதென்பதே எங்கள் கொள்கை.”
“இது நாஸ்திகத் தன்மை.”
“தாங்கள் அந்த மாதிரிக் கருதலாம். இதற்கு முன்னாலும் பலர் அப்படித்தான் கருதினார்கள். ஆனால், ஸுபியர்கள் தங்கள் புனிதமான ரத்தத்தால் இந்த உண்மையை நிலைநாட்டியிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் அவசியம் ஏற்பட்டால் எங்கள் ரத்தத்தைக் கொடுத்தும் அதைக் காப்போம்.”
“உங்களால்தான் இங்கு இஸ்லாம் மதம் பரவுவது தடைப்படுகிறது.”
“உங்களுடைய கத்தியையும் நெருப்பையும் நாங்கள் மனப்பூர்வமாக வெறுக்கிறோம். ஆயினும் எங்கள் செயல் மூலம் உங்களுக்குத் தடை எதுவும் ஏற்படுத்தியதில்லையே! அப்படியிருந்தும், நீங்கள் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 272, புத்தகங்கள், எங்கள், பக்கம், நாங்கள், எல்லா, கங்கை, வால்காவிலிருந்து, நீங்கள், கடவுளின், சாஹிப், அந்த, “ஆம், அல்லவா, நாஸ்திகத், நாஸ்திகர்கள், சிறந்த, யார், “அந்த, “உங்களுடைய, ஜோதி, இஸ்லாம்