வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 271
தங்கள் தெய்வ குருவாக வணங்கியதைப் போலவே, இப்பொழுது இந்தப் பாபாவையும் அவரது சிஷ்யர்களையும் வணங்குகிறார்கள்.
மடத்தின் பழைய தலைவர்களின் சமாதிகளை வணங்கி விட்டு கிராமவாசிகள் திரும்பிச் சென்றனர். இரவிலே பால் போன்ற வெண்ணிலாவின் ஒளி எங்கும் பரவியிருக்கிறது. இஸ்லாமியத் தொழிலாளர்களின் வீட்டுப் பக்கத்திலிருந்து இரண்டு நபர்களோடு ஒரு பெரியவர் மடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் நெருங்கி வந்ததும் மௌல்வி அபுல் அலாயி என்பதை பாபா தெரிந்து கொண்டார். மௌல்வி தன் தலையிலே ஒரு வெள்ளைத் தலைப்பாகையும், உடம்பிலே நீண்ட அங்கியும், வெள்ளைப் பைஜாமாவும் தரித்திருந்தார். அவருடைய நீண்ட கரிய தாடி, காற்றிலே அசைந்து கொண்டிருந்தது. பாபா எழுந்து நின்று தன்னிரு கரங்களையும் நீட்டிக் கொண்டு,
“வாருங்கள் மௌலானா சாஹிப்! அஸ்லாம் அலைக்” என்றார்.
“வாலேகும் சலாம்” என்று கூறி பாபாவைத் தழுவிக் கொண்டார் மௌலானா.
“எங்கள் சிம்மாசனம் இந்த வெறுங்கல்தான். அமர்ந்தருளுங்கள்.”
“பிரபோ! நாஸ்திகர் (காபிர்கள்) களின் கூட்டம் இங்கு கூடியிருந்ததை, நான் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.”
“வேடிக்கை என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், அவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லாதீர்கள். அது நூருவின் இதயத்தில் முள்போலத் தைக்கிறது.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 271, புத்தகங்கள், போலவே, பிக்ஷு, பக்கம், கிராமவாசிகள், கங்கை, வால்காவிலிருந்து, பாபா, கொண்டார், நீண்ட, மௌலானா, நின்று, மௌல்வி, ஜனங்களுக்கு, சிறந்த, முஸ்லீம், மடம், பௌத்த, வணங்குகிறார்கள்