வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 270
2
மழைக்காலம் கழிந்துவிட்டது. ஆயினும், அங்கங்கே பள்ளம் படுகுழிகளில் தண்ணீர் நிரம்பியிருந்தது. பெரிய பெரிய வரப்புக்களால் சூழப்பட்ட வயல்களெங்கும் வெள்ளக்காடு. அவற்றின் மத்தியிலே, பசுமையான நெற்பயிர்கள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தன. பரந்து கிடந்த மகதநாட்டின் மத்தியிலே பசுமை நிறைந்த வயல்கள், வாய்க்கால்கள் புடைசூழ நின்றது ஹில்ஸா (பாட்னா) என்ற பெரிய கிராமம். அதில்
வியாபாரிகளுடைய சில வீடுகள் மட்டும் செங்கற்களால் ஆனவை. மற்ற விவசாயிகள், தொழிலாளர்களுடைய வீடுகள் ஓலை வேய்ந்த குடிசைகள். இவைகளைத் தவிர சில பிராமணர்களின் வீடுகளும் இருந்தன. அவைகள் மற்ற வீடுகளைவிட சிறிது நல்ல நிலைமையில் இருந்தன. ஹில்ஸாவின் கோவிலை நூறு வருடங்களுக்கு முன்னால் பக்தியார் கில்ஜியின் சேனைகள் நாசமாக்கிவிட்டன. அதற்குப் பிறகு மிஞ்சியுள்ள குட்டிச் சுவர்களையும் ஹிந்துக்கள் பூசை செய்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தின் மேற்குக் கோடியிலே, பௌத்த மடம் இருக்கிறது. அதன் வெளிக்கட்டிடங்களெல்லாம் உடைந்து போயிருந்தாலும், வீடு இப்பொழுதும் மனிதர் குடியிருக்கத் தகுதியாக இருக்கிறது. அதற்குள் நுழைந்து, அங்கு வசிப்பவர்களைப் பார்ப்பவர்கள், பௌத்த பிக்ஷு க்கள் அந்த மடத்தை விட்டுப் போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.
ஒரு நாள் மாலை, அந்த மடத்தின் வெளியே ஒரு கல் மேடைமீது, நடுவயதுள்ள ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடைய உடம்பிலே காஷாய உடை இருந்தது. அவருடைய தலையும் நெற்றியும் மழுங்கச் சிரைக்கப்பட்டிருந்தன. ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாததால், தாடியும் மீசையும் கொஞ்சம் நீட்டிக் கொண்டிருந்தன. அவரது கையிலே மரக் கட்டையால் செய்த மாலை இருந்தது. அன்று பௌர்ணமி தினம். கிராமத்தின் ஆண்களும் பெண்களும் துணி முதலிய பொருள்களைக் கொண்டு வந்து, அந்தக் காஷாயதாரிக்கு முன்னால் வைத்து வணங்குகிறார்கள். அவர் மலர்ந்த முகத்தோடு கையைத்
தூக்கி ஆசீர்வதிக்கிறார்.
இது என்ன? ஹில்ஸாவின் பழைய பௌத்த மடங்கள் தான் அழிந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 270, புத்தகங்கள், அந்த, பக்கம், பௌத்த, வேண்டும், பெரிய, கங்கை, வால்காவிலிருந்து, முன்னால், ஹில்ஸாவின், கிராமத்தின், அவருடைய, இருக்கிறது, இருந்தன, மாலை, வீடுகள், மானியம், ஆட்சி, தர்ம, சிறந்த, மத்தியிலே, இஸ்லாமிய, கொண்டிருந்தன, மற்ற