வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 269
“சர்வ நாசமாயிருக்கும் ஜஹாம்பனாக்!”
“ஆகவே, நாம் மணற் பரப்பின் மீது நமது ராஜ்யத்தின் அஸ்திவாரத்தை அமைக்கக் கூடாது. அடிமை அரசர்களை நாம் காப்பியடிக்கக் கூடாது.”
இதுவரை மௌனமாக இருந்த பிரதம மந்திரி இப்பொழுது வாய் திறந்தார்.
“ஆனால் அரசர்க்கு அரசே கிராமத் தலைவர்களின் பலத்தை நாம் குறைத்து விட்டால், ஆட்சியின் கரங்கள் அந்தக் கிராமம் வரை எப்படி நீளும்?”
“பட்டுடை உடுத்தி குதிரைச் சவாரி செய்யும் இந்தக் கிராமத்தலைவர்கள் இல்லாத காலத்தில், வேலைகள் எப்படி நடந்தன?”
“நான் அதை ஆராயவில்லை.”
“நான் ஆராய்ந்திருக்கிறேன். அரசர்கள் தங்களைக் கொள்ளைக்காரர்களாகக் கருதிய காலத்தில்தான் கொள்ளைக்காரர்களை நிர்வாகிகளாக நியமித்தார்கள். இந்த மாதிரி நடப்பது இயற்கையே. அதற்கு முன்னால், ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படும் சண்டைத் தகராறு, அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது முதலிய எல்லாக் காரியங்களையும் அந்தப் பஞ்சாயத்தே நிர்வகித்து வந்தது. அரசனுக்கு, கிராமத்தின் தனிப்பட்ட நபரோடு எவ்விதத் தொடர்பும் கிடையாது. அவன் பஞ்சாயத்துக்களோடுதான் தொடர்பு கொண்டிருந்தான். தனக்கும் வரி செலுத்தும் விவசாயிக்கும் இடையே இணைப்பு, ஸ்தாபனமாக இந்தப் பஞ்சாயத்து இருந்து வருவதாகக் கருதினான்.”
“அப்படியானால் ஜஹாம்பனாக்! நூறு வருடங்களுக்கு முன்னால் இறந்து விட்ட பஞ்சாயத்துக்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 269, புத்தகங்கள், பக்கம், நாம், கங்கை, வால்காவிலிருந்து, வேண்டும், ஜஹாம்பனாக், “நான், முன்னால், எங்கள், எப்படி, கூடாது, குழந்தைகளைக், காலத்திலேயே, சிறந்த, முதலிய, இஸ்லாமிய, இந்தக், அழித்தார்கள், தூண்டி