வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 268
“ஆனால், ஜஹாம்பனாக்! அடிமை அரசர்களும் டெல்லியில்தானே வசித்தார்கள்?”
“நீங்கள் தயங்க வேண்டாம். என்னை முன் கோபியென்றும், நிதான மற்றவனென்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தன்மைகளையெல்லாம் மாறுபட்ட கருத்துக்களைக் கேட்பதிலிருந்து என்னைத் தடுத்துவிட மாட்டாது. அடிமை அரசர்களுக்கு, டெல்லி பறவைகளின் நிலையற்ற கூடாகவே இருந்தது. மங்கோலியப் பெரும் புயலிலிருந்து, இந்தியாவின் முஸ்லீம் ஆட்சி மயிரிழையில் தப்பிப் பிழைத்தது. மங்கோலியர்களைப் போன்ற பலம் பொருந்திய எதிரிகளை முஸ்லீம்கள் சந்தித்ததில்லை, என்பது ஹிந்துக்களுக்குத் தெரியாது. தெரிந்து அவர்கள் மறைமுகமாகவேனும் மங்கோலியர்களைத் தூண்டியிருந்தால், பாரத நற்பூமியிலே புதிதாக ஊன்றப்பட்டிருந்த இஸ்லாமியச் செடி அந்தப் பெரும் புயலிலே பறந்து போயிருக்கும், செங்கிஸ்கானின் வம்சம் உலகத்தின் பெரிய நாடான சீனாவை ஆண்டு கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?”
“தெரியும் அரசே!”
“அந்த வம்சம் ஸமனியா* மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது.”
“ஸமனியா! அதனுடைய எத்தனையோ மடங்களும் தேவாலயங்களும் கொளுத்தப்பட்ட பின்பும், நாசமாக்கப்பட்ட பிறகும், இந்த மதம் இஸ்லாமியக் கொள்கைகளின் விரோதக் கடல், இன்னும் பாரத புண்ணிய பூமியிலிருந்து ஒழிந்து விடவில்லை.”
“இஸ்லாமியக் கொள்கையின் விரோதக் கடலாக அதை மட்டும் ஏன் சொல்கிறீர்கள்?”
“ஜஹாம்பனாக்! ஹிந்துக்கள் பிராமணர்களின் மதத்திலும் நிரந்தரமான கடவுள்களுக்கு இடமிருக்கிறது. ஆனால், இந்த ஸமனியர்கள் கடவுளை முற்றிலும் மறுக்கிறார்களே.”
“செங்கிஸ்கான் வம்சத்தினர் இன்று மட்டுமல்ல, செங்கிஸ்கானின்
__________________________________________________
ஸமனியா-புத்த மதத்தை மங்கோலியர்கள் அழைத்த பெயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 268, புத்தகங்கள், பக்கம், ஹிந்து, வால்காவிலிருந்து, கங்கை, வம்சம், பாரத, மதத்தை, விரோதக், பெரும், எனது, மீதும், ஆட்சி, சிறந்த, அடிமை