வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 267
“ஆனால் அரசே! அரசருக்கு இஸ்லாமியக் கடமையும் இருக்கிதல்லவா?’
மரண தண்டனை அடையக் கூடிய குற்றத்தைச் செய்து விட்ட ஒருவன், இஸ்லாத்தின் சரணத்தைப் பற்றிக் கொண்டுவிட்டால், நான் அவனை விடுதலை செய்துவிட முடியுமா? ஒரு அடிமை இஸ்லாத்தைத் தழுவினால், அவனை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்துவிட முடியும். அதுவும் அரச பொக்கிஷத்திலிருந்து அவனுக்குள்ள விலையைக் கொடுத்து, இந்த நாட்டிலே, அடிமைகளின் மீது கோடிக்கணக்கான ரூபாய்கள் ஈடுகட்டப்பட்டிருக்கின்றன. எல்லா அடுமைகளையும் விடுதலை செய்துவிட வேண்டுமென்று நீங்கள் கூடச் சொல்ல மாட்டீர்கள்.”
“இல்லை ஜஹாம்பனாக்; அடிமைகளை வைத்துக்கொள்ள கடவுளின் திருவாக்கும் அனுமதித்திருக்கிறதே!”
“இல்லை, தாங்கள் சொன்னால் எனது ஆட்சிக்கே ஆபத்து ஏற்படுவதாயிருந்தாலும் சரி, முஸ்லீம்கள், முஸ்லீம் அல்லாதார் எல்லா அடிமைகளையும் விடுதலை செய்து விடும்படி பிரகடனப்படுத்துகிறேன்.”
“இல்லை, இது இஸ்லாம் தர்ம சாஸ்திரத்திற்கு விரோதம்.”
“தர்ம சாஸ்திரத்திற்கு விரோதம் என்பது இருக்கட்டும் முல்லா சாஹிப்! இப்பொழுது நீங்கள் யாராவது ஓர் இளம் அடிமைப் பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள். முஸ்லீம் வீடுகளில்தான் அதிகமான அடிமைகள் இருக்கிறார்கள்.”
“முஸ்லீம்களுக்கு இது அனுமதிக்கப்பட்டதாகவே இறைவன் கூறியிருக்கிறான்.”
“ஆனால், அடிமைகளும் மோமின்(முஸ்லிம்) களாகவே இருந்தால்? ஆயினும், அவர்களை இந்த உலகத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக்கூட நீங்கள் அனுமதிக்கத் தயாராயில்லை! அவர்களை சுவர்க்கத்தின் நம்பிக்கையிலேயே வைத்திருக்க விரும்புகிறீர்கள்.”
“நான் வேறொன்றும் சொல்ல விரும்பவில்லை. இஸ்லாமிய ஆட்சியிலே, இஸ்லாமிய தர்ம சாஸ்திரத்தின்படி அரசாட்சி நடக்க வேண்டும். இதுதான் நான் சொல்ல விரும்புவது.”
“இந்த விருப்பம் மறுக்கப்படவில்லை. இஸ்லாமிய ஆட்சி ஏற்படுவதற்கு, நாட்டிலுள்ள ஜனங்களில் பெரும்பாலோர் முஸ்லீம்களாக இருக்க வேண்டும். உங்கள் முன்னிலையில், எனது கருத்துக்களைத் தெளிவாக்கிவிட
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 267, புத்தகங்கள், சொல்ல, விடுதலை, சிறந்த, நீங்கள், “இல்லை, இஸ்லாமிய, பக்கம், செய்துவிட, நான், கங்கை, வால்காவிலிருந்து, சாஸ்திரத்திற்கு, தர்ம, விரோதம், அவர்களை, முஸ்லீம், வேண்டும், சகித்துக், அவனை, செய்து, எல்லா, எனக்கு, “ஆனால், எனது