வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 259
“அவரோடுகூட அந்தப்புரப் பெண்களெல்லாம் சதியாகப் போகிறார்களோ?”
“யாருக்கு விருப்பமோ, அவர்கள் சதியாவார்கள்.”
“சேனாதிபதிக்கு என்ன ஆனார்?”
“கிழட்டுச் சேனாதிபக்கு, சாகும் பொழுதுதான், விழிப்பு ஏற்பட்டது. நிலைமை மாறுவதைப் பார்த்த சேனா நாயகர்களில் பலர், பின் வாங்கி ஓடினார்கள். பின் வாங்கி ஓடுவதற்குக்கூட அவர்களுக்குத் திறமை இல்லை. இவர்களில் யாரும் தப்பிப் பிழைத்திருப்பார்களென்று நான் நம்பவில்லை.”
“அவர்கள் மூன்று வருடங்களுக்கு முன்னால் இறந்திருந்தால், குமார ஹரிச்சந்திரர் நமது அரசராகவும், மாதவன் கன்னியகுப்ஜத்தின்
சேனாதிபதியாகவும் இருந்திருந்தால்.”
“ஆச்சாரிய! உங்களின் ஒவ்வொரு வார்த்தையும், கண்ணாடியில் பிரதிபிம்பம்போல் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் அரசருக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னீர்கள். ராய் பித்தௌராவுடன் சேர்ந்து துருக்கர்களை எதிர்க்க வேண்டுமென்று சொன்னீர்கள். யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.”
“இப்பொழுது வருத்தப்படுவதில் பலன் ஒன்றுமில்லை. சரி நீ என்னென்ன ஏற்பாடுகள் செய்து வந்திருக்கிறாய். அதைச் சொல்.”
“ஐம்பது ஐம்பது வீரர்களை ஏற்றிக் கொண்டு ஐநூறு படகுகள் வந்து கொண்டிருக்கின்றன. காகா, மோகே, சலக்கூ இவர்களின் தலைமையிலே அந்தச் சேனைகளை பிரித்து உத்தரவுகள் கொடுத்து வந்திருக்கிறேன். சந்தாவரி (டாவர்)லிருந்து கொஞ்ச தூரம் கிழக்கே ஒதுங்கித் துருக்கர்களைத் தாக்கும் படியும் நேரடித் தாக்குதல்களில் அதிகமாக ஈடுபடாமல் மறைந்து மறைந்து தாக்கும்படியும், நிலைமையைக் கவனித்துக் கொண்டு அவசியம் நேர்ந்தால் கிழக்கே பின் வாங்கும்படியும் அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.”
“கனோஜின் அரண்மனை என்ன ஆயிற்று?”
“நான் அங்கிருந்து முடிந்த அளவு அதிகமான சாமான்களை வெளியேற்றி விட்டேன். அவைகளை ஏற்றிச் செல்லும் படகுகள், கங்கை வழியாகக் கிளம்பி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.”
“இதற்காகத்தான் மாதவ! உன்னைச் சேனாதிபதியின் பார்வையிலிருந்து
நான் காப்பாற்றினேன். அவன். தான் இறப்பதற்கு முன்னால் உன்னையும் கொல்லுவித்திருந்தானாகில்! உன்னையும் குமாரரையும் காப்பாற்றி விட்டேன். இப்பொழுது ஹிந்துக்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. என்ன ஆனாலும் சரி; நாம் கடைசிவரை நமது சக்தியின் ஒவ்வொரு அணுவையும் யோசித்து உணர்ந்து செலவிட வேண்டும்.”
“மற்றொரு படகு வருகிறது ஆச்சாரியரே!”
“ஆல்ஹன்! அது வந்ததுமே, எல்லாப் படகும் இங்கிருந்து புறப்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 259, புத்தகங்கள், கங்கை, பின், பக்கம், என்ன, வால்காவிலிருந்து, கிழக்கே, படகுகள், மறைந்து, உன்னையும், விட்டேன், கொண்டு, முன்னால், வாங்கி, சிறந்த, நான், நமது, ஒவ்வொரு, சொன்னீர்கள்