வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 260
“நல்லது, ஆச்சாரியரே!” ஆல்ஹணன் விநயத்தோடு சொன்னான்.
“நல்லது, மாதவ!வா. கீழ்த்தட்டுக்குப் போவோம். ஆனால், அங்கே இருட்டாக இருக்கும். நான் வேண்டுமென்றே விளக்குகளையெல்லாம் அணைத்து விடும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன்.”
இருவரும் கீழே இறங்கினார்கள். ஆச்சாரியர், ‘ராதே’ என்று கூப்பிட்டார்.
“ஏன் அப்பா!” ஓர் இளம் பெண்ணின் குரல் வந்தது.
“சக்கிமுக்கியைத் தட்டி விளக்கை ஏற்று.”
“நல்லது.”
அவர் மாதவன் பக்கம் திரும்பி, “தம்பி! சிலர் வைத்திய ராஜா என்கிறார்கள். சிலர் ஆச்சாரியர் என்கிறார்கள். சிலர் அப்பா என்கிறார்கள். இவைகளையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வது எனக்கு ரொம்ப
கஷ்டமாயிருக்கிறது. நீங்கள் எல்லோரும் எனது குழந்தைப் பருவத்தின் பெயரான சக்குவென்றே அழையுங்கள்.”
“இல்லை, பெண்களின் பழக்கத்தை மாற்றுவது சுலபமல்ல. ஆகவே, நாங்கள் எல்லோரும் உங்களை பாபா சக்ரபாணி பாண்டே என்பதற்கு பதிலாக, அப்பா என்றே அழைக்கிறோம்.”
“நல்லது, விளக்கேற்றிவிட்டார்கள். வா, போவோம்.”
இருவரும் கீழே வந்தார்கள். படகின் மூன்றில் இரண்டு பாகம் கீழ்த்தளமாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு அறைகள் தடுக்கப்பட்டிருந்தன. கொஞ்சம் காலி இடமும் இருந்தது. இருவரும் ஓர் அறைக்குள் நுழைந்தனர். அங்கு விளக்கின் மங்கலான ஒளியிலே ஒரு கட்டிலிருப்பதும், அதன் மீது கழுத்துவரை வெள்ளைப் போர்வையால் போர்த்தப்பட்டு ஒருவர் படுத்திருப்பதும் தெரிந்தது. கட்டிலுக்குப் பக்கத்திலே ஒரு சிறிய நாற்காலியிலிருந்து, ஓர் அழகிய யுவதி எழுந்திருந்தாள்.
“பாமா! குமார் அசையவில்லையே?” என்று சக்கரபாணி கேட்டார்.
“இல்லை, அப்பா! அவருடைய சுவாசம் முன் போலவே ஒரே மாதிரி வந்து கொண்டிருக்கிறது.”
“பயந்து போய்விட்டாயா, மகளே!”
“சக்கரபாணியின் குரு நிழலிலே பயப்படுவதா? ககடுவார் வம்சம், தங்கள் குரு துரோணரை முன்னமேயே கண்டுபிடித்திருந்தால்...”
“இதோ நமது சேனாதிபதி, பரமசகாயன், மகாராஜாதிராஜன்
ஹரிச்சந்திரனின் சேனாதிபதி மாதவன் வந்திருக்கிறார்.”
“மகாதேவி பாமா! உங்கள் ஊழியன் மாதவன், உங்கள் சேவைக்காகக் காத்திருக்கிறான்” என்று கூறி மாதவன் வணங்கினான்.
“எனக்கு மாதவன் புதியவரல்ல. குமாரோடு சிலம்பம் விளையாடிய
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 260, புத்தகங்கள், மாதவன், அப்பா, பக்கம், “நல்லது, என்கிறார்கள், சிலர், இருவரும், கங்கை, வால்காவிலிருந்து, இரண்டு, உங்கள், “இல்லை, சேனாதிபதி, குரு, ஆச்சாரியர், சிறந்த, போவோம், கீழே, எல்லோரும்