வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 257
“அதிகாரம் என்னிடமிருந்தால் ஒவ்வொரு ஹிந்து வாலிபனும் கத்தியெடுக்கும் படி உத்தரவிடுவேன்.”
“இது பல தலைமுறையாக வந்த குற்றம் குமார்! யுத்தத்திற்கு ராஜபுத்திரர்களை மட்டுமே பொறுப்பாக்கி விட்டது. துரோணன், கிருபன் போன்ற பிராமணர்களும் யுத்தம் செய்தார்களென்று மகாபாரதம் சொல்லுகிறது. ஆனால்
இன்று யுத்தம் ஒரு ஜாதிக்கு மட்டும் சொந்தமாக ஆகிவிட்டது.”
“ஜாதிப் பிரிவினைகளும் நமது பாதையிலே பெரிய முட்டுக்கட்டை என்று நான் கருதுகிறேன்.”
“மிகப் பெரிய முட்டுக்கட்டை குமார்! நம் முன்னோர்கள் செய்த பல நல்ல காரியங்களுக்காக, அவர்களை வணங்குகிறோம். பெருமைப்படுகிறோம். ஆனால் ஹிந்துக்களை ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரித்து வைத்தது இருக்கிறதே, அது மகா பாவம்.”
“அதன் பலனை இன்றும் நான் அனுபவிக்கிறோம். இப்பொழுது காபூல் ஹிந்துக்களின் தேசமல்ல? லாகூரும் போய்விட்டது. டெல்லியின்முறை வந்திருக்கிறது.”
“இன்றுங்கூட நாம் பிருதிவிராஜனுடன் சேர்ந்து போராட முடிந்தால்?”
“ஓ! எத்தனை தீமைகள் வைத்திய ராஜரே!”
“ஆம்! நம்முடைய படகு தீமைகளின் பாரத்தாலேயே முழுகிவிடும் நிலைமையை அடைந்திருக்கிறது. ஆயினும் அவைகளிடம் கொண்ட மோகத்தால், அவற்றில் சிலவற்றை எறிந்துவிட்டுப் படகின் கனத்தைக் குறைக்கக் கூட முயற்சி செய்யாமல் இருக்கிறோம்.”
“மதத்தின் அஜீரணமான நிலை இது!”
“இல்லை; மதத்தின் க்ஷயரோகம். நாம் எவ்வளவு கொடுமைகளைச் செய்திருக்கிறோம்? வருடந்தோறும் லட்சக்கணக்கான விதவைகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்கினோம்! ஆண்களையும் பெண்களையும்
மிருகங்களைப் போல் விலை கூறி விற்றோம். தேவாலயங்களிலும், மடங்களிலும் தங்கம், வெள்ளி, வைரம், முத்து இவைகளைக் குவியல் குவியலாகக் கொண்டு போய்ச் சேர்த்து, அன்னிய நாட்டுக் கொள்ளைக்காரர்களுக்கு அழைப்பனுப்பினோம்! ஒன்று சேர்ந்து எதிரியை எதிர்க்க வேண்டிய சமயத்தில் நமக்குள்ளேயே பிளவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நமது புலன்களின் ஆசையைத் தீர்ப்பதற்காக பிரஜைகளின் உழைப்பை அலட்சியமாக வீணாக்குகிறோம்.”
“ஆசையல்ல, வைத்திய ராஜரே! பைத்தியக்காரத்தனம். ஒரு மனிதனின் விருப்பத்திற்கு-காம சுகத்திற்கு, மனமொத்த ஒரு பெண்ணே போதும். ஆனால், புலன்களின் பயித்தியக்கார வெறிக்கு, ஐம்பதாயிரம் பெண்களும் பொருட்டில்லை. அங்கே காதல் என்பதைக் காணவே முடியாது. கடந்த
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 257, புத்தகங்கள், பக்கம், நாம், வால்காவிலிருந்து, கங்கை, சேர்ந்து, நான், ராஜரே, முட்டுக்கட்டை, புலன்களின், வைத்திய, யுத்தம், சிறந்த, கடந்த, குமார், நமது, பெரிய