வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 256
“ஸ்ரீ ஹர்ஷனின் ஸ்தானத்தில் வைத்திய ராஜா சக்கரபாணி, ஜெயச்சந்திரனின் தோழராக அமைந்திருந்தால் நல்லது வைத்திய ராஜரே! ககடுவார் சூரியன் அஸ்தமிக்கும் வரை நீங்கள் எங்களோடு கூடவே இருக்க வேண்டும்.”
“அந்தச் சூரியன் அஸ்தமித்தால், அதோடுகூட நானும் அஸ்தமித்து விடத் தயாராயிருக்கிறேன். ஆனால், ககடுவாரின் சூரியன் மட்டும் அஸ்தமிக்கப் போவதில்லை. ஹிந்துக்களின் வாழ்வே அஸ்தமித்து விடும். மல்லகாமிப்
பிராமணனாகிய நான் தர்ப்பையையும், தண்ணீரையும் மட்டும் கையில் எடுக்கத் தெரிந்தவனல்ல. வாளேந்திப் போரிடவும் தெரிந்தவன். ஆகவே துருக்கர்களோடு ஏற்படும் போரில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன்!”
“என் தந்தை தனது சொந்த மருமகனுக்கே உதவி செய்ய மறுக்கிறார். பிருதிவிராஜ் என் சொந்த அத்தான்......சம்யுக்தை அவனைக் காதலித்தாள். தன் விருப்பப்படியே மகிழ்ச்சியுடன் அவனுடன் சென்றாள். இதில் தந்தையார் கோபப்பட என் இருக்கிறது?”
“பிருதிவிராஜன் மாரத வீரன் குமார்!”
“அதில் சந்தேகமில்லை வைத்தியராஜ்; தன்னுடைய ஒப்பற்ற வீரத்தில் காரணமாகவே, துருக்க சுல்தானோடு எதிர்த்து நிற்கிறான். இல்லாவிடில், கன்னிக குப்ஜ சாம்ராஜ்யத்திற்கு முன்னால் அவனுடைய நாடு எத்தனை சிறியது. சுல்தான் அவன் வழி மட்டும் விட்டுவிட்டால் போதும், சுல்தான் அவனுக்கு மரியாதை செலுத்துவதோடு ஏராளமான இனாமும் கொடுப்பான். சுல்தானுடைய கண், டில்லியின் மீதில்லை வைத்தியராஜ்! 600 வருட காலமாக பாரதத்தின் பெரும் பகுதியை ஆண்டு வரும் கன்னிய குப்த ராஜ்யத்தின் மீதிருக்கிறது. ஆனால், இதைத் தந்தைக்கு உணர்த்துவது யார்? அவரோ உணரும் சக்தியையே இழந்துவிட்டிருக்கிறார்.”
“இந்தச் சமயத்தில் அரசர், ஆட்சிப் பொறுப்பை இளவரசரிடம் ஒப்படைத்து விட்டால்?”
“தந்தையைச் சிம்மாசனத்திலிருந்து அகற்றிவிட்டால் என்ன என்று நான்
ஒரு முறை நினைத்ததுண்டு. ஆனால், இருபது வருட காலமாக நீங்கள் அளித்த கல்வி, என்னை அவ்விதம் செய்யவிடாமல் தடுத்து விட்டது.”
“கன்னியகுப்ஜ சிம்மாசனம், நொறுங்கிப்போயிருக்கிறது குமார்;ஓர் அடிதவறாக எடுத்து வைத்தாலும் உடனே பொடிப் பொடியாக உதிர்ந்து விடும். தந்தையும், மகனும் கலகம் செய்யும் சமயமல்ல இது.”
“என்ன செய்யலாம் வைத்தியராஜரே! நம்முடைய சேனாதிபதியும், சேனா நாயகர்களும் பயங்கொள்ளிகளாகவும், தகுதியற்றவர்களாகவும் இருக்கிறார்கள். சில வாலிப சேனா நாயகர்கள் தகுதியும் வீரமும் உடையவர்கள். ஆனால் அவர்களின் பாதையிலே இந்தக் கிழங்கள் குறுக்கே நிற்கின்றன. மந்திரிகளின் நிலைமையும் இதுதான். வெறும் முகஸ்துதி செய்வதையே தங்கள் கடமையாகக் கொண்டிருக்கிறார்கள்.”
“அந்தப்புரத்திற்குத் தங்கள் சகோதரிகளையும், புதல்விகளையும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 256, புத்தகங்கள், சூரியன், பக்கம், மட்டும், வால்காவிலிருந்து, கங்கை, வைத்தியராஜ், சுல்தான், வருட, காலமாக, தங்கள், சேனா, குமார், நான், நீங்கள், வைத்திய, நானும், அஸ்தமித்து, சிறந்த, விடும், சொந்த