வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 254
“எனது தீட்சர் குரு மித்ரபாதரா?”
“ஆம் பாவம்-புண்ணியம், நல்லொழுக்கம்-தீயொழுக்கம் எல்லாம் கற்பனைகள். உலகம் அழிவற்றது அல்லது அழியக் கூடியது என்று நிச்சயம் செய்வது முடியாத காரியம். சுவர்க்கம்-நரகம், கட்டு-விடுதலை இவைகள் குழந்தையறிவின் புரியாத மயக்கம்; பூஜை, வணக்கம் இவைகளெல்லாம் பாமரரை ஏமாற்றும் சூழ்ச்சி, தெய்வங்கள், தேவதைகள் யாவும் ஜனங்களின் பொய்யான கற்பனையென்பது, நாகார்ச்சுனனின் தத்துவம்.”
“நான் இதே தத்துவத்தோடுதான் வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன்.”
“எல்லோரும் அப்படித்தான் கழிப்பார்கள் அரசே! கையில் கிடைப்பதை விட்டு விட்டு, கடனுக்குப் பின்னே அலைவாருண்டோ?”
“ஆனால், இப்பொழுது கையில் கிடப்பதை வைத்துக் கொண்டு, உறுத்து உறுத்துப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது போலிருக்கிறதே. நீயோ இன்னும் கட்டு விடவில்லையே!”
“நான் தங்களை விட எட்டு வருடம் இளையவன். மேலும் ஒருத்தியைத் தவிர வேறு கல்யாணமும் செய்யவில்லை.”
“கல்யாணம் செய்வதால் என்ன ஆகிறது? அதிகக் கல்யாணங்கள் செய்வதால், அந்தச் சூழலிலே மனிதன் களைத்து இறந்து விடுகிறான்.”
“என் வீட்டில் ஒரு பிராமணத்திதான் இருக்கிறாள், மகராஜ்!”
“ஆம்; கவிஞர் ஸ்ரீ ஹர்ஷன் அந்தப் பல்லுப் போன கிழவியோடு சதியாகப் போகிறார் என்று உலகமும் நம்பிவிடும்!”
“நம்பிவிடும்; நம்பிக் கொண்டு இருக்கிறது மகராஜ். நான் எனது நூல்களிலே, சமாதி நிலையிலிருந்து பிர்மத்தை நேரே தரிசிப்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.”
“அந்தப் புதிய தத்துவத்திலே பிர்மத்தைப் பற்றியும், அதை நேரே தரிசிப்பதைப் பற்றியும் பேசுவதற்கு அடிப்படைகள் இருக்கின்றனவா?”
“மகராஜ்! அதில் எதைப் பற்றிப் பேசுவதற்கும் அடிப்படைகள் இருக்கிறது.”
“பிரஜைகளை எப்பொழுதும் கண்மூடிகளாகவே வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு இந்த நேர் தரிசனம் கிடைக்கச் செய்ய முடியுமா?”
“என்ன அரசே! உங்களுக்கு மதத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டதா?”
“அது எனக்குத் தெரியாது கவிஞ! அந்த நம்பிக்கை எப்பொழுது வருகிறது, எப்பொழுது போய்விடுகிறது என்று என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தர்மாத்மாக்களாகிய பிராமணர்களின் உபதேசத்தைக் கேட்டும், நடவடிக்கைகளைப் பார்த்தும் எதையும் நிச்சயிப்பது எனக்குக் கஷ்டமாயிருக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 254, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, இருக்கிறது, செய்வதால், நேரே, மகராஜ், அடிப்படைகள், எப்பொழுது, நம்பிக்கை, செய்ய, பற்றியும், தரிசிப்பதைப், விட்டு, “ஆம், முடியாது, சிறந்த, கட்டு, “நான், கொண்டு, கையில், அரசே, தவிர