வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 242
இறந்த பிறகு மோட்சத்தையும் நிர்வாண லோகத்தையும் அளிப்பதாக உபதேசங்கள் செய்பவர்கள், இங்கே லட்சக்கணக்கான அடிமைகள் மிருகங்களைப் போல விற்கப்படுவதையும், வாங்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறார்கள், இறந்துவிட்ட ஆத்மாக்களுக்கு விடுதலையளிப்பதாகச் சொல்லும் இவர்கள், இந்த உயிருள்ள ஆத்மாக்களுக்கு ஏன் விடுதலையளிப்பதில்லை? ஒரு நாள் பிரயாகையிலே அரசன் சீலாதித்தியனிடம், “மகராஜா! தாங்கள் பெரிய பெரிய பணக்காரப் பிராமணர்களுக்கும், புத்த மடங்களுக்கும் ஐந்து வருடங்களுக்கொருமுறை ஏராளமான பணத்தைப் பங்கிட்டுக் கொடுக்கிறீர்கள். இந்தப் பணத்தையெல்லாம் அடிமைகளை விடுதலை செய்வதற்கு உபயோகித்தால், அது குறைவான புண்ணியமா?” என்று கேட்டேன். “மற்றொரு சமயம் இதைப் பற்றிப் பேசலாம்” என்று கூறி, சீலாதித்தியன் தட்டிக் கழிக்க முயன்றான். ஆனால், நான் விடவில்லை. மற்றொரு சமயத்தையும் கண்டு பிடித்தேன். அந்தச் சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவள் அவனுடைய சகோதரி பிக்ஷு ணி ராஜ்யஸ்ரீ! அடிமைகளின் நரக வாழ்வை நான் ராஜ்யஸ்ரீக்கு முன்னால் வருணித்தபோது, அவளுடைய மனம் இளகிவிட்டது. பரம்பரை பரம்பரையாக வரும் இந்த அடிமை மக்களை, பணத்தைக் கொடுத்து விடுதலையடையச் செய்வது பெரிய புண்ணிய காரியமென்று நான் எடுத்துச் சொல்லியதும், அவள் அதைப் பலமாகப் பிடித்துக் கொண்டு விட்டாள். பாவம், இளகிய மனம்
படைத்த அந்தப் பெண், இந்த அடிமைப் பழக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் பெரிய பெரிய சுயநலத்தை எப்படி அறிவாள்? இந்த உலகத்தைச் சுவர்க்கமாக மாற்றிவிட்டால் உடனே ஆகாயத்திலிருக்கும் அந்தக் கற்பனைச் சுவர்க்கம் மறைந்து விடுமென்பது அவளுக்கு எப்படித்தெரியும்? ஆகாயத்தில் சுவர்க்கத்தையும் பாதாளத்தில் நரகத்தையும் நிரந்தரமாகச் செய்வதற்கு அதன் பெயரால் வியாபாரங்கள் செய்வதற்கு இந்த உலகத்தையும் சுவர்க்கம்-நரகம் என்றும், எஜமான்-அடிமை என்றும் பிரித்து வைக்க வேண்டியது அவசியம்.
மறுமுறை சமயம் கிடைத்ததும் நான் அரசரோடு பேச்சைத் தொடங்கினேன். அவர் “நான் ஒருமுறை ஏராளமான பணத்தைச் செலவு செய்து எல்லோரையும் விடுதலை செய்துவிடுகிறேனென்று வைத்துக் கொள்வோம். ஆனால் மறுபடியும் ஏழ்மையின் காரணமாக மனிதர்கள் விற்கப்படுவார்கள்” என்றார்.
“எதிர்காலத்தில் மனிதர்களை விற்பதும்-வாங்குவதும் தண்டனைக்குரியது என்று ஏற்படுத்திவிடுங்களேன்.”
அவர் மௌனமாக யோசிக்கத் தொடங்கினார். அவரே, எழுதியதாகச் சொல்லப்படும் ‘நாகாநந்தம் என்ற நாடகத்தில் வரும் நாகனை உதாரணமாகக் காட்டினேன். அவன் மற்றவர்களின் உயிரைக் காப்பதற்காகத் தன் உயிரையே பலி கொடுத்தான் என்று கதை சொல்கிறது. இதற்கு அவர் என்ன பதில் சொல்வார்? பிராமணர்களுடைய பையை நிரப்புவதிலும் மடங்களையும்
கோயில்களையும் கட்டுவதிலும் கிடைக்கிற பெரும் புகழ், அடிமைகளை விடுதலை செய்வதிலே கிடைக்காதென அவர் கருதுகிறார் என்று நான் புரிந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 242, பெரிய, நான், புத்தகங்கள், அவர், வால்காவிலிருந்து, செய்வதற்கு, கங்கை, விடுதலை, பக்கம், வரும், சுவர்க்கம், என்றும், மனம், அடிமை, அடிமைகளை, சிறந்த, கொண்டு, ஆத்மாக்களுக்கு, ஏராளமான, சமயம்