வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 218
“நம்மைப்போல் இன்னும் அநேக யௌதேயர்கள் இருப்பார்களல்லவா, தாத்தா?”
“இருக்கலாம் குழந்தாய்! ஆனால் சூறைக் காற்றினால் அள்ளி எறியப்பட்ட உலர்ந்த சருகுகளைப் போல் அவர்கள் நாலாபுறமும் சிதறிக் கிடக்கிறார்கள். நம்மைப் போலவே அவர்களும் நாகர் வம்சத்திலோ அல்லது வேறு ஏதாவது வம்சங்களிலோ கலந்து, தங்கள் தனித்துவத்தை இழந்து விட்டிருப்பார்கள்.”
“நம்மைப் பிராமணர்கள் என்று நாம் ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும், தாத்தா?”
“அதுவும் ஒரு பழைய கதை, குழந்தாய்! ஒரு காலத்தில் எல்லாப் பிரதேசத்திலும் ஜன ஆட்சிதான் இருந்தது. அரசர்களே இல்லை. அந்தக் காலத்தில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் என்ற வேற்றுமையும் கிடையாது.”
“என்ன! பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் ஒரே குலத்தவர்களா?”
“ஆம்; எல்லோரும் ஒரே குலத்தவர்தான். அவசியம் ஏற்படும் பொழுது பூஜையும் புரோகிதமும் செய்வார்கள். தேவை ஏற்படும் பொழுது கையிலே கத்தியும் ஏந்துவார்கள். இந்த வசிட்டரும், விசுவாமித்ரரும் வந்துதான் ஜாதி வேற்றுமையை ஆரம்பித்து வைத்தார்கள்.”
“அதனால்தான், ஒரே தந்தையின் இரண்டு புதல்வர்களில் ஒருவர் ரந்திதேவரைப் போல் க்ஷத்திரிய அரசனாகவும், மற்றவர் கௌரிவிதியைப் போல் பிராமண மகரிஷியாகவும் ஆக முடிந்திருந்தது.”
“அப்படி எழுதப்பட்டிருக்கிறதா, குழந்தாய்?”
“ஆம் தாத்தா! வேதத்திலும், இதிகாசங்களிலும் காணப்படுகிறது. இவர்கள் இருவரும் சங்கிருதி மகரிஷியின் புத்திரர்கள். இது மட்டுமா? இன்னும் எத்தனையோ விநோதமான விஷயங்கள் நமது பழைய நூல்களிலே காணப்படுகின்றன. அவைகளை, இந்தக் காலத்து ஜனங்கள் நம்பக்கூட மாட்டார்கள். சர்மண்வதி (சம்பல்) நதிக்கரையிலே இருக்கும் தஷாபூரை நீ பார்த்திருக்கிறாயல்லவா, தாத்தா?”
“ஆம், குழந்தாய்! அநேகம் தடவை. அது அவந்தியில் தானே இருக்கிறது. அங்கு கல்யாணங்களுக்காகப் பல முறை போயிருக்கிறேன். அந்த நகரிலே பெரிய பெரிய பணக்காரர்களும் வியாபாரிகளுமான நாகர்கள் பலர் வசிக்கின்றனர்.”
“அதே தஷாபூர்தான் ரந்திதேவரின் தலைநகரமாய் இருந்தது. அந்த நதிக்குச் சர்மண்வதி என்று ஏன் பெயர் ஏற்பட்டது தெரியுமா? அது ஓர் ஆச்சரியமான கதை.”
“அது என்ன குழந்தாய்?”
“பிராமண சங்கிருதியின் புத்திரனான க்ஷத்திரிய அரசன் ரந்தி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 218, புத்தகங்கள், குழந்தாய், தாத்தா, பக்கம், “ஆம், கங்கை, போல், வால்காவிலிருந்து, பொழுது, ஏற்படும், க்ஷத்திரிய, சர்மண்வதி, பெரிய, அந்த, சிறந்த, பழைய, இன்னும், ஏற்பட்டது, யௌதேயர்கள், அந்தக், பெயர், பிராமணர்கள், காலத்தில்