வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 219
“என்ன, இவை உண்மையிலேயே நமது பழைய நூல்களிலே எழுதப்பட்டிருக்கிறதா, குழந்தாய்?”
“ஆம்! தாத்தா! மகாபாரதத்தில்* தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.”
“மகாபாரதத்திலா? ஐந்தாவது வேதமான மகாபாரதத்தில், பசு மாமிசம் சாப்பிடுவதைப் பற்றி எழுதியிருக்கிறதா!”
“ரந்திதேவனுடைய மாளிகையில் விருந்தினர்களுக்காக இந்தப் பசு மாமிசங்களைச் சமைப்பதற்கு இரண்டாயிரம் சமையற்காரர்கள் இருந்தார்கள். ஆயினும் பிராமண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால், ‘மாமிசம் குறைவாக இருக்கிறபடியால் தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று விருந்தினர்களைச் சமையல்காரர் கள் கேட்டுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.”
“பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டார்களா? என்ன சொல்லுகிறாய் குழந்தாய்?”
“ஐந்தாவது வேதமான மகாபாரதம்** பொய் சொல்லுமா, தாத்தா?”
“என்ன! உலகம் இவ்வளவு தூரம் உருண்டு, புரண்டு மாறிப் போய் விட்டதா?”
“ஆம், தாத்தா! உலகம் உருண்டு புரண்டு கொண்டு தான் இருக்கிறது. அப்படியிருந்தும், தங்களைப் பக்காப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த அரைக்குருடர்கள், மற்றவர்களின் கண்களையும் மூடிவிட விரும்புகிறார்கள். நமது முன்னோர்களான யௌதேயர்கள், இந்தப் பிராமணர்களின் சூழ்ச்சிகள் பரவுவதற்கு முந்தி உள்ள முறைகளையும் நீதிகளையும்
____________________________________________________
* “ராக்நோ மஹா நஸே பூர்வ ரந்தி தேவஸ்ய வைத்வேஜ!
அஹந்ய ஹநி பந்யேதே த்வே ஸஹஸ்த்ரே கவாம்
ததா ஸமாம்ஸ தததோ ஹ்மத்நங் ரந்தி தேவஸ்ய
நித்தியஸஹ
அதுலா கீர்த்திர் பவந் ந்ரூபஸ்ய த்விஜ ஸத்தம்”
வனபர்வம் 208: 8-10
“மஹாநதி சர்மராஷே ருத்க்லேதாத் ஸங்ஸ்ருஜே யதஹ
த தஸ் சர்மண்வதி த்யேவம் விக்யாதாஸுமஹாநதி”
சாந்தி பர்வம் 29-23
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 219, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, தாத்தா, மாமிசம், வேதமான, இந்தப், புரண்டு, தேவஸ்ய, ரந்தி, உருண்டு, உலகம், நமது, இரண்டாயிரம், மாளிகையில், சிறந்த, வெளிப்பட்டு, சர்மண்வதி, குழந்தாய், “என்ன, ஏற்பட்டது, “ஆம்