வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 207
அஸ்வகோஷ் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பெருமூச்சு விட்டவனாய் “சொல்” என்றான்.
“நான் எனது உயிரை மாய்த்துக் கொண்டு விடமாட்டேன். தற்கொலை முட்டாள்தனமான கருணையற்ற செயல் என்று பகவான் புத்தர் கூறியிருக்கிறார். இப்போது நான் வீணை வாசிப்பதில் திறமை பெற்று விட்டேன் என்பது உனக்குத் தெரியுமல்லவா?”
“ஆம்; நீ நன்கு பயிற்சி பெற்றுவிட்டாய். இப்பொழுதெல்லாம் உன் கையிலே வீணையைக் கொடுத்துவிட்டு நான் நிச்சிந்தையாகப் பாடுகிறேன்!”
“அந்தச் சமயத்தில் அஸ்வகோஷின் உடல் என்னிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்டு விடும். ஆனால் அமரன் அஸ்வகோஷ்-யுக யுகாந்தரங்களுக்கும் பரவி நிற்கும் மகான் கவி அஸ்வகோஷை நான் வணங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய வீணையிலே உனது கவிதைகளை மீட்டி அகில பாரதத்திலும் மட்டுமல்ல, அதற்கப்பால் உள்ள வெளிநாடுகளிலும் உனது புகழைப் பரப்பிக் கொண்டிருப்பேன். எனது உயிருள்ள வரை - நமது வாழ்க்கைப் பிரவாகம் மற்றொரு பிரதேசத்தில் மறுபடியும் ஒன்றாகச் சேர்ந்து ஐக்கியப்படும் வரை, உனது கீதங்களைப் பாடிக் கொண்டே இருப்பேன். என்னைப் பிரிந்து வாழ நேர்ந்தால் நீ என்ன செய்வாய் காதல?”
இந்தச் சொற்களைக் கேட்டு, அஸ்வகோஷின் இதய ஆழத்திலிருந்து எழுந்த துக்க அலை, அவனது உடலை நடுங்கச் செய்தது. இதைப் பிரபாவும் உணர்ந்தாள். அஸ்வகோஷ் பேச முயற்சித்தான். ஆனால் தொண்டை உலர்ந்து விட்டது. கண்கள் நீரைக் கக்கின. சில நிமிஷங்கள் போராடிய பிறகு ஈன ஸ்வரத்திலே,
“அந்த நேரம் மிகக் கொடுமை நிறைந்ததாய் இருக்கும் பிரபா! ஆனால், நானும் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். உன்னுடைய காதல் தூண்டுகிற வழியிலே கவிதைகள் செய்வேன். அவைகளைப் பாடிக் கொண்டிருப்பேன். வாழ்வின் கடைசி நிமிஷம் வரை உன்னுடைய அஸ்வகோஷை சிரஞ்சீவியாக இருக்கச் செய்வேன்.”
“சரயூவின் பெருக்கும் தூங்கத் தொடங்கிவிட்டது. நேரமாகிறது. புறப்படு; வீட்டுக்குச் செல்வோம்.”
9
வேனிற் காலம். தாய் சுவர்ணாட்சி நோயாகப் படுத்திருந்தாள். அஸ்வகோஷ் இரவும் பகலும் தாய்க்குப் பக்கத்திலேயே இருந்தான். பிரபாவும்கூட பகல் பொழுது முழுவதையும் அவளுக்குப் பக்கத்திலேயே கழித்தாள். வைத்தியத்தினால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை. சுவர்ணாட்சியின் நிலைமை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 207, புத்தகங்கள், நான், அஸ்வகோஷ், செய்வேன், பக்கம், உனது, கொண்டிருப்பேன், வால்காவிலிருந்து, கங்கை, என்ன, பிரிந்து, நேர்ந்தால், பாடிக், பக்கத்திலேயே, உன்னுடைய, கொண்டு, சிறந்த, எனது, தற்கொலை, அஸ்வகோஷின், அஸ்வகோஷை